பக்கம் எண் :

9

காட்சி III.
மதனவல்லி நந்தவனத்தில் பந்தாடுதல்
அதைக் குறித்து சகிகள் பாடுதல்.

___


     அந்தமிகு மதனவல்லி தஞ்சைவளர் சரபோஜி யண்ணன்மீதே
     சந்தமுறுங் கவிப்புலவ ருரைத்தபுகழ்க் கவிகடமைத் தடங்கொள்
                                                       வீணைத்
     தந்திரியி னுறப்பாடிச் செங்கைவளை கலகலெனத் தனது கொங்கைச்
     சுந்தரங்கொள் கந்துகத்தை யெடுத்தடித்து விளையாடத் தொடங்கி
                                                        னாளே
     ஏந்தெழிளார் மதனவல்லி யெடித்தடிக்குங் கந்துகமேந் திழையார்
                                                       முன்னம்
     கூந்தலினை யவிழ்த்தாடை நெகிழ்ந்துமணி வடஞ்சிதறச் கொங்கை
                                                       சேர்ந்து
     காந்தனியற் றிடுஞ்செய்கை செய்தல்கண்டு வெட்கியதைக் கைவிட்
                                                       டாங்கே
     வாய்ந்தநெடு வீதியுற்றாள் சரபநரேந் திரன்பவனி வரல்கண் டாளே

___
சகிகள் பாட்டு முடிந்ததும், தூரத்தே மோகினி
வருவதைக்கண்டு அவளை வர்ணித்தல்.

___

சகிகள் பாட்டு

 ராகம் - சௌராஷ்டிரம்]                     [தாளம் - மிச்ரம்

பல்லவி.


     மோகினி வந்தாள்                     அதிரூப
     மோகினி வந்தாள்