பக்கம் எண் :

22 புலவராற்றுப்படை

     பாரி உம் காரி உம் ஆய் உம் ஒரி உம் பேகன் உம் நள்ளி உம்
அதிகன் உம் ஆகி-பாரி காரி ஆய் ஓரி பேகன் நள்ளி அதிகனெனவாய்,

     உம்மைகள் எண்ணின்கண் வந்தன.

     வரையாது கொடுத்தோர் வாழ் நாள் ஈது அன்று-தமக்கெனவொன்றும்
வரைந்துவையாமற் கொடுத்தோராகிய வள்ளன்மார் வாழுங்கால மிஃதன்று,

     அரையர் உம் தமிழர் அல்லர்-இக்காலத்தரசருந் தமிழை யுடையா
ரல்லர்,

     ஆகலின்-ஆதலால்,

     நல் தமிழ் மாட்சியும் கற்றவர் மாட்சியும் புரிந்து-நல்ல தமிழின்
மாட்சிமையையும் அதனைக்கற்றாரின் மாட்சிமையையும் விரும்பி,

     உளம் களிப்ப தெரிந்து ஆங்கு அருள்நர் இல் என் கவற்சி
இல்-உள்ளங்களிப்பத் தெரிந்து கொடுப்பாரில்லை யென்னுங் கவலையால்,

     ஆங்கு-அசை. இல் உருபுமயக்கம்.

     புல் என் முகன் கண்டு உடுக்கை உம் உண்டி உம் இருக்கை உம்
உசாஅய் கொடுக்குநர் யார் என-புல்லென்ற முகத்தைக் கண்டு உடுக்கு
மாடையு முண்ணுமுணவும் இருக்குமீடமுமுளவாவென ஆராய்ந்து கொடுப்பார்
யார் ஒருவருமிலரே யென்று,

     “உசாவே சூழ்ச்சி” என்பது தொல்காப்பியம். சூழ்ச்சி-ஆராய்தல்.
யாரென்னும் வினா எதிர்மறுத்து நின்றது.

     அடுக்கும் அவர் கரப்ப குன்று வரும் நெஞ்சினன் உழந்து ஏ
நின்றனன்-யானடுக்குமவர்கள் என்னைக் கண்டொளித்தலாற் குன்றுதல்
வருகின்ற நெஞ்சினையுடையேனாய் வருந்தி நின்றேன்;

     நெஞ்சினனென்னுங் குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.
ஏ-அசை.

     கற்றவர் கல்லா மற்றவர் இவர் என தெற்று என படாஅ வகையிற்று
ஆகி-கற்றவரிவர் கல்லாத மற்றவரிவரென்று தெளிவுபடாத வகையினை
யுடையதாய்,