பக்கம் எண் :

119

5.    இந்திரன் பழைய போல வந்துனது முன்னேமுறை
          இட்டானோ-குறை-பட்டானோ
     அந்தரத்தி லேசென்றாலும் எந்தாய் இங்கே யிருக்க
          ஆர்படுவார்-தேர்-யார்விடுவார்

6.    என்னிரண்டு கால்மிதித்த உன்னிட மார்பும் வயிறும்
          இருதாளும்-உன்-இருதோளும்
     வன்னிதின்னக் கண்டேனே என்னைப்போல் ஒருபிள்ளை
          வாச்சுதல்லோ-பேய்-ஆச்சுதல்லோ

7.    தள்ளரிய தாறுவந்து தாய்வாழையைக் கெடுத்த
          சதிதானோ-தலை-விதிதானோ
     பிள்ளைஎன்று நான் பிறந்து பெற்றவனைக் கொன்றான் என்று
          பேர்எடுத்தேன்-நல்ல-சீர்எடுத்தேன்

8.  கண்ணில் எண்ணெய்க் குத்தி என்னைக் காத்துக் கொண்டிருந்துபட்டம்
       கட்டுமுன்னே-பலன்-கிட்டுமுன்னே
  வெண்ணெய் திரண்டு வரச்சே தாழி உடைந்தாற்போலே
       விடுத்தாயே-என்னைக்-கெடுத்தாயே

9.    நாலுபேர் பிள்ளையிலும் என்மேல் உன் மானமெல்லாம்
          நாட்டினையே-பா-ராட்டினையே
     காலிலே தைத்ததுஉன் கண்ணிலே தைத்ததுபோலக்
          காத்தாயே இன்று-தீர்த்தாயே

10.   வெந்தவனம் கடந்துன் ஊரினில் வந்தார் முகத்தில்
          விழிப்பேனோ-ஆரை-அழைப்பேனோ
     என்தன் முகந்திருத்தி உச்சிமோந்து தழுவி
          எடுப்பார்ஆர்-முத்தம்-கொடுப்பார்ஆர்

11.   மாமந்திர சாலையும் சிங்காதனமும் ஒளி
          வாங்காதோ-கண்டால்-ஏங்காதோ
     பூமண்டலாதிபர்கள் தாம் வந்து பணியும்அம்
          புசபதனே-அய்யோ-தசரதனே

-----