பக்கம் எண் :

12

ஸ்ரீ

ஸ்ரீராமஜெயம்

இராம நாடகம்

பாயிரம்

ஏற்புடைக் கடவுள் வணக்கங்கள்.

அனுமார் தோத்திரம்

நேரிசை வெண்பா


   கோதண்ட தீக்ஷா குருராம நாடகத்தைத்
   தீதண்டா வாறடியேன் செப்பவே - கோதண்டா
   மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை
   வாருதியே நீதுணையா வா!
 

தரு-1

கலியாணி ராகம்                          ரூபகசாப்புத் தாளம்

பல்லவி

     துணைவந் தருள்புரிகுவாய் - அனுமந்தா நீ
     துணைவந் தருள்புரிகுவாய்                 (துணை)

அநுபல்லவி

     துணைவந் தருள்வாய் நல்ல சொற்பொருளதுபுல்ல
     இணையொன்றிலாத வல்ல ராமநாடகம் சொல்ல     (துணை)

சரணங்கள்

1    துஷ்டவாலி தோழமையை        விண்டோனே-விண்டு
       சுக்கிரீவன் தோழமையைக்      கொண்டேனே-வெகு
     திட்டமா ராகவனைப் போய்க்     கண்டோனே-அவன்
       செப்பிய சொல்லமிர்தத்தை     உண்டோனே-சுக்கிரீவன்
          கஷ்டமும் அரசிழந்த
          நஷ்டமும் அவனிருப்பும்
          சட்டமாச் சொன்ன         மாருதி
          இட்ட கருணை            வாருதி    (துணை)