பக்கம் எண் :

13

2    அஷ்ட திக்கில் தென்திசை       உகந்தோனே-சீதைக்கா
       அரிய பிலத்தினுட்            புகுந்தோனே-அப்போது
     பொட்டெனப் பூமியினைப்        பிளந்தோனே-உயிரைப்
       போக்கவே மிகமனம்          தளர்ந்தோனே-சம்பாதி
          எட்டவே இருந்துமென்ன
          கிட்டவே வரஅவற்குப்
          பட்டதைச் சொல்லும்       தூயனே
          முட்டிலா ஆஞ்ச          நேயனே   (துணை)

3    உக்கிரமா விள்வசொரூபம்        எடுத்தோனே-மயேந்திரத்
       துதைந்து கடலைத்தாண்டி      விடுத்தோனே-பொல்லாத
     அக்கிரம லங்கணியைக்கீழ்ப்      படுத்தோனே-நற்றிரு
       ஆழியைத் தேவிகையினில்     கொடுத்தோனே-ஆறுபோல்
          மிக்கவே ரத்தங்கள் வாயால்
          கக்கவே ராட்சத ரெல்லாம்
          மக்கவே செய்யும்          ருத்திரனே
          முக்கிய மாம்வாயு          புத்திரனே  (துணை)

4    தேவிசூடாமணி கையில்          தரித்தோனே-சொன்ன
       சேதிகள்எல்லாம் அங்கி        கரித்தோனே-படு
     பாவிராவணன் லங்கையை        எரித்தோனே-ராமன்
       பக்கல்வந்துற்ற சேதிகள்        விரித்தோனே-இந்த
          பூவுலகத் தோரும் தேவர்
          கோவும் முனிக்கணமும் ப
          ராவிய சிரஞ்         சீவியே
          மேவிய என         தாவியே   (துணை)

5    அருமையாம் சஞ்சீவி மலையை    ஏற்றோனே-பிர்ம்ம
       அஸ்திர வேதைக ளெல்லாம்    தீர்த்தோனே-சீதையை
     உரிமையாம் ராகவன் பக்கல்      சேர்த்தோனே-பரதன்
       உயிரை விடுமுன்னமே போய்க்  காத்தோனே-தவத்தில்
          பெருமை யார்முனி விருந்தினில்
          தரும ராமனோ டருந்தின
          ஒருமையாற் சஞ்சீவி        ராயனே
          பிரம பட்டம் பெறும்உ      பாயனே   (துணை)