பக்கம் எண் :

130

உன்னை இகழ்ந்தவர் மாள்வர்உற்ற தெல்லாம்
சொன்னபின் என்செயல் காண்டி சொல்லிடென்றான்
 

வண்டுளர் தாரவன் வாய்மைகேட்ட மங்கை
கொண்ட நெடுங்கணின் ஆலிகொங்கை கோப்ப
உண்டுகொ  லாம்அருள் என்கண் உன்கண் ஒக்கின்
பண்டைய இன்று பரிந்தளித்தி என்றாள்
 

கள்ளவிழ் கோதை கருத்துணராத மன்னன்
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின்மின்ன நக்கான்
உள்ளம் உவந்தது செய்வென் ஒன்றும் உலோவேன்
வள்ளல் இராமன்உன் மைந்தன் ஆணை என்றான்
 

ஆன்றவன் அவ்வுரைகூற அன்னம் அன்னாள்
தோன்றிய பேரவலம் துடைத்தல் உண்டேல்
சான்றிமையோர் குலம்ஆக மன்னநீ அன்று
ஏன்றவரங்கள் இரண்டும் ஈதி என்றாள்
 

வரங்கொள இத்துணைமம்மர் அல்லர்எய்தி
இரங்கிட வேண்டுவ தில்லை ஈவென் என்பால்
பரங்கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான்
உரங்கொள் மனத்தவன் வஞ்சம் ஓர்கிலாதான்
 

ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என்
சேய் உலகாள்வது சீதைகேள்வன் ஒன்றால்
போய்வனம் ஆள்வது எனப்புகன்று நின்றாள்
தீயவை யாவை யினும்சிறந்த தீயாள்
 

இந்நிலை நின்றவள் தன்னைஎய்த நோக்கி
நெய்ந்நிலை வேலவன் நீதிசைத்ததுண்டோ
பொய்ந்நிலை யோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ
அந்நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான்
 

திசைத்ததும் இல்லை எனக்குவந்து தீயோர்
இசைத்ததும் இல்லைமுன் ஈந்தஇவ் வரங்கள்
குசைப்பரி யோய்தரின் இன்று கொள்வேன் அன்றேல்
வசைத்திறன் நின்வயின் நிற்கமாள்வென் என்றாள்
 

கொள்ளான் நின்சேய் இவ்வர சன்னான் கொண்டாலும்
நள்ளா திந்த நானிலம் ஞாலம் தனில்என்றும்