பக்கம் எண் :

131

உள்ளார் எல்லாம் ஓதஉவக்கும் புகழ்கொள்ளாய்
எள்ளா நிற்கும் வன்பழிகொண் டென்பயன் என்றான்
 

கண்ணே வேண்டும் என்னினும் ஈயக்கடவேன் என்
உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ
பெண்ணே வண்மைக் கேகயன்மானே பெறுவாயேல்
மண்ணே கொள்நீ மற்றையதொன்றும் மறவென்றான்
 

இன்னே இன்னே பன்னியிரந்தான் இகல்வேந்தன்
தன்னே ரில்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்
முன்னே தந்தாய் இவ்வரம் நல்காய் முனிவாயேல்
என்னே மன்னா யார்உளர் வாய்மைக் கினிஎன்றாள்
 

நின்மகன் ஆள்வான் நீஇனிதாள்வாய் நிலமெல்லாம்
உன்வயமாமே ஆளுதிதந்தேன் உரைகுன்றேன்
என்மகன் என்கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடிறவாமை நயவென்றான்
 

மெய்யே என்றன் வேர்அற நூறும் வினைநோக்கி
நையா நின்றேன் நாவு முலர்ந்தேன் நளினம்போல்
கையான் இன்றென் கண்ணெதிர் நின்றும் கழிவானேல்
உய்யேன் நங்காய் உன்அபயம் என்உயிர் என்றான்
 

இரந்தான் சொல்லும் இன்னுரை கொள்ளாள் முனிவெஞ்சாள்
மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வசைபாராள்
சரந்தாழ் வில்லாய் தந்தவரத்தைத் தவிர்கஎன்றல்
உரந்தான் அல்லால் நல்லற மாமோ உரைஎன்றாள்
 

கொடியாள் இன்ன கூறினள் கூறக் குலவேந்தன்
முடிசூடாமல் வெம்பரல் மொய்கா னிடைமெய்யே
நெடியான் நீங்க நீங்குவென்ஆவி இனி என்னா
இடியேறுண்ட மால்வரைபோல் மண்ணிடை வீழ்ந்தான்
 

ஒன்றாநின்ற அருயிரோடும் உயர்கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழல்லால்
இன்றோர் காறும் எல்வளையார்தம் இறையோரைக்
கொன்றாரில்லை கொல்லுதியோ நீ கொடியாளே
 

ஆழிப் பொற்றேர் மன்னவன் இவ்வாறயர் வெய்திப்
பூழிப் பொற்றார் முழுதுமடங்கப் புரள் போதில்