146 அவ்வுரை கேட்டலும் அசனிஏறென வெவ்வுரை வல்லவள் மீட்டும் கூறுவாள் தெவ்வடு சிலையினாய் தேவிதம்பி என்று இவ்விரு வோரொடும் கானத்தான் என்றாள் வனத்தினன் என்றவள் இசைத்த மாற்றத்தை நினைத்தனன் இருந்தனன் நெருப்புண் டான்என வினைத்திறம் யாதினி விளைப்பது இன்னமும் எனைத்துள கேட்பன துன்பம்யான் என்றான் வாக்கினால் வரம்தரக் கொண்டு மைந்தனைப் போக்கினேன் வனத்திடைப் போக்கி பார்உனக்கு ஆக்கினேன் அன்னது பொறுக்க லாமையால் நீக்கினான் தன்னுயிர் நேமிவேந் தென்றாள் மாண்டனன் எந்தைஎன் தம்முன் மாதவம் பூண்டனன் நின்கொடும் புணர்ப்பினால் என்றால் கீண்டிலன் வாய்அது கேட்டும் நின்றயான் ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் நீயினம் இருந்தனை; யானும் நின்றனென் ஏயெனும் மாத்திரத்து ஏற்று கிற்றிலேன் ஆயவன் முனியும் என்று அஞ்சினென் அல்லால் தாய்எனும் பெயர்எனைத் தடுக்கற் பாலதோ மாளவும் உளன்ஒரு மன்னன் வன்சொலால் மீளவும் உளன்ஒரு வீரன் மேயபார் ஆளவும் உளன்ஒரு பரதன் ஆகினால் கோளில அறநெறி குறைவுண் டாகுமோ சுழியுடைத் தாய்சொலும் கொடிய சூழ்ச்சியால் வழியுடைத்தாய்வரும் மரபை மாய்த்து ஒரு பழிஉடைத் தாக்கினன் பரதன் பண்டெனும் மொழிஉடைத் தாக்கலின் முறைமை வேறுண்டோ நோயீர் அல்லீர் நுங்கண் வன்றன் உயிர் உண்டீர் போயீரே நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே மாயீர் மாயா வன்பழி தந்தீர், முலைதந்தீர் தாயீரே நீர் இன்னும் எனக்கென் தருவீரே |
|
|
|