பக்கம் எண் :

147

 

ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும்
தின்றும் தீரா வன்பழி கொண்டீர் திருஎய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏகக்
கன்றும் தாயும் போல்வன கண்டு கழியீரே
 

மாளும் என்றே தந்தையை உன்னான் வசைகொண்டாள்
கோளும் என்னா லேஎனல் கொண்டான் அதுவன்றேல்
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகெல்லாம்
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசாள்வான்

உய்யா நின்றேன் இன்னமும் என்முன் உடன்வந்தோன்
கையார் கல்லைப் புல்லட குண்ணக் கையேந்தி
வெய்யோன் நான் சாலியின் வெண்சோறமுது என்ன
நெய்யோ டுண்ண நின்றது நின்றார் நினையாரோ
 

வில்லார் தோளான் மேவினன் வெங்கா னகம்என்ன
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை
கொல்லேன் மாயேன் வன்பழியாலே குறைவற்றேன்
அல்லேனோயான் அன்புடையார் போல் அழுகின்றேன்
 

ஏன்றுன் பாவிக் கும்பிவயிற்றின் இடைவைகித்
தோன்றும் தீராப் பாதகம் அற்றென் துயர்தீரச்
சான்றும் தானே நல்லறமாக தகைஞாலம்
மூன்றும் காண மாதவம் யானே முயல்கின்றேன்
              (பள்ளிபடைப்படலம் 57-59, 64, 70-75, 77, 79, 80, 84)

பரதர் கோலாதேவிக்குச் சத்தியம் கூறுதல்

விருத்தம்-25 - தரு-14 

ஆண்தகை கோசலை அருகர் எய்தினன்
மீண்டும்மண் இழிதர வீழ்ந்து கேழ்கிளர்
காண்டகு தடக்கையின் கமலச் சீறடி
பூண்டனன் கிடந்தனன் புலம்பி னானரோ
 

எந்தைஎவ் வுலகுளான் எம்முன் யாண்டையான்
வந்தது தமியென்இவ் மறுக்கம் காணவோ
சிந்தையின் உறுதுயர் தீர்த்திரால் எனும்
அந்தரத் தமரரும் அழுது சோரவே