155 பெருமகன் என்வயின் பிறந்த காதலின் வரும்என நினைகையும் மண்ணை என்வயின் தரும்என நினைகையும் தவிரத் தானையால் பொரும் என நினைகையும் புலமைப் பாலதோ பொன்னொடும் பொருகழல் பரதன் போந்தனன் நன்னெடும் பெரும்படை நல்கல் அன்றியே என்னொடும் பொரும்என இயம்பற் பாலதோ மின்னொடும் பொருவுற விளங்கும் வேலினாய் சேணுயர் தருமத்தின் தேயை செம்மையின் ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ பூணியல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டெனைக் காணிய நீயிது பின்னும் காண்டியால் கோதறத் தவஞ்செய்து குறிப்பின் எய்திய நாதனைப் பிரிந்தனள் நலத்தின் நீங்கினாள் வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு தூதெனப் பரதனும் தொழுது தோன்றினான் அயாவுயிர்த் தழுகணீர் அருவி மார்பிடை உயாவுறத் திருவுளம் உருகப் புல்லினான் நியாயம்அத் தனைக்கும்ஓர் நிலைய மாயினான் தயாமுதல் அறத்தினைத் தழீஇய தென்னவே புல்லி நின்றுஅவன் புனைந்த வேடத்தைப் பல்முறை நோக்கினான் பலவும் உன்னினான் அல்லலின் அமுங்கினை ஐய ஆளுடை மல்லுயர் தோளினான் வலியனோ என்றான் அரியவன் உரைசெய பரதன் ஐயநின் பிரிவெனும் பிணியினால் என்னைப் பெற்றஅக் கரியவள் வரம்எனும் காலனால் தனக்கு உரியமெய்ந் நிறுவிப்போய் உம்பரான் என்றான் நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர் தந்தாய் தனியறத்தின் தாயே தயாநிலையே எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே அந்தோ இனிவாய்மைக்கு ஆர்உளரே மற்றென்றான் |
|
|
|