16 அநுபல்லவி கையில் ஆகாதநான் ஏதேது சொன்னாலும் காக்கக் கடன்என் பிழையை நீக்கக்கடன்உன்பாரம் (ஐய) சரணங்கள் 1. எள்ளத் தனையும் குத்தம் இல்லாத சுப சத்தம் தெள்ளத் தெளியேன் மொத்தம் செய்தேன் இதோ சுத்தம் வெள்ளைக் கவி என்றும்-இதுசொன்ன பிள்ளைக் கவி என்றும்-சொல்வதல்லால் விள்ளத் தகுமோ பழுதுகள் உள்ளத் தகுமோ சாமிநீ தள்ளத் தகுமோ திருவுளம் கொள்ளத் தகுமோ அறிகிலேன் (ஐய) 2. நற்பொருள் நீதமும் நவரச பேதமும் வைப்புள்ள கீதமும் வண்ணவி நோதமும் ஒப்புத் தெரிவேனோ-அதிலுள்ள தப்புத் தெரிவேனோ-இலக்கணச் சொற்பிக் கறியேன் உன்புகழ் கற்பிக் கறியேன் சொல்லி மெய்ப்பிக் கறியேன் சாமி ஒப்பிக் கறியேன் எங்கள் (ஐய) 3. உத்தம முனி முன்னம் உரைக்கக் கம்பர் சொன்ன நற்றமிழ் தன்னைச் சின்ன நாடகம் ஈ தென்ன வைத்திப்படிக் கண்டேன்-பெரியோர்முன் புத்திப்பிழை கொண்டேன்-என்சாமி பித்துச்சொல் வைப்போலே |