164 அநுபல்லவி அஞ்சா திருங்கள் உங்கள் ஆசீர்வா தந்துணை அப்புறம் ராட்டதர்க் குண்டென்கை யிலக்கனை செஞ்சா மாருதம் போலவே நொ டிக்கிறேன் பஞ்சாகப் பறந்தோட அ டிக்கிறேன் (அந்) சரணங்கள் 1. கண்டோரைக் கொல்லுவேன் கொல்லாமல்-விட்டால் காகுத்தன் என்றுநீர் சொல்லாமல் மண்டி எதிர்த்து முன் நில்லாமல்-காலில் வந்து வணங்கினார் அல்லாமல் எண்டிசைமேல் அவராலே ஆனமட்டும் ராட்சத சேனைகள் வந்துபோ ராடட்டும் அண்டபகிரண்டம் ஆ யிரத்தெட்டும் அப்புறம் போனாலும் என்கணை யேஎட்டும் (அஞ்) 2. அந்தண ராலே பசுவாலே-தங்கள் ஆவிகொடுத்தவர் விண்மேலே முந்திய தேவர்க்கும் அப்பாலே-சொல்லும் மூர்த்திகள் ஆவார் அதனாலே இந்திரன் ஆனதேவன் வந்து தடுக்கிறேன் என்றாலும் ராட்சதப் போரில் அடுக்கிறேன் சுந்தர கோதண்ட வாளி விடுக்கிறேன் சூரியனைக் கண்ட பனிபோல் ஒடுக்கிறேன் (அஞ்) 3. மங்கியே தாயார் நிலங்கீற-முடி மன்னன் உயிரும் தடுமாற எங்கள் பரதனும் வேசாற - நான் ஏன்வந்தேன் என்சென்மம் ஈடேற உங்கள் பணிவிடை நானே பொறுக்கிறேன் உக்கிர கோதண்டத் தில்நாணி இறுக்கிறேன் எங்கெங்கும் என்கணையாலே நொறுக்கிறேன் ராட்சதப் பூண்டெல்லாம் வேரோ டறுக்கிறேன் (அஞ்) |