பக்கம் எண் :

166

4. பலத்த ராட்சதர் ஆட்ட - பாட்டங்கள் எல்லாம் மாட்ட
  சலித்தபேர் துன்பம் ஓட்ட-தர்மத்தை நிலைநாட்ட      (இரு)

------

சூர்ப்பநகை ஸ்ரீ ராமரைக் கண்டு மோகித்தல்

இருந்தரா கவன்பூமேனி எழில்எல்லாம் நோக்கி ஆசை
புரிந்தசூர்ப் பநகை லங்கா புரிராவ ணற்குத் தங்கை
அருந்தும்மோ கத்தால் ஐயன் அடிமுடி அளவும் கண்டு
தெரிந்துள்ளே எண்ணி நெஞ்சம் திருகுவாள் உருகு வாளே

திபதை-3

நீலாம்பரிராகம்                                ஆதிதாளம்

கண்ணிகள்

1. தேவனோ மனிதன் தானோ - யாவனோ யௌனம் உள்ள
     சித்தனோ-இவன்-கர்த்தனோ-பிரமன்
  பாவனையாற் கண்டபெண்கள்-ஆவியைக்கொள்ளை கொளென்று
     படைத்தானோ-என்னை-உடைத்தானோ

2. எட்டானைக்கையும் இவன்கை-மட்டாமோ சொரசொரென்ன
     இருக்குமே-உள்ளே-சுருக்குமே-முன்னே
  பட்டமன்மதன் தவம்செய்-திட்டிந்த உருவாய்ப்புறப்
     பட்டானோ-தவசு-தொட்டானோ

3. ஈசனுக்கு முக்கண் இந்திர ராசனுக்கோர் ஆயிரங்கண்
     எண் ஆச்சே - இவற்கிரு-கண்ஆச்சே-இவனைப்
  பேசினால் என்சாமிஇவன்-கேசவன் தானோ நானொன்றும்
     பிறியேனே-ஆரோ-அறியேனே

4. புந்திபவளத்தையிவன் - செங்கனிவாய்க் கொப்புச் சொல்லப்
     போகுமோ-நிகர்-ஆகுமோ-ஐயோ
  அந்தவார்த்தையைத் துப்பென்ற-நிந்தையால் பவளம் துப்பென்று
     ஆச்சுதே-உவமை-போச்சுதே

5. முடிவைத்த குழல் சடையா - முடியாவிட்டால் பெண்களெல்லாம்
     முடியாரோ - மனம் - மடியாரோ இவன்