பக்கம் எண் :

167

  அடிவைத்த பூமிப்பெண் மேனி - புளகித்தாற் போலல்லோ புல்லை
     அரும்பினாள் - மெத்த - விரும்பினாள்

6. மரவுரிசேர் இடைபீதாம் பரமதைச் சேராதென்ன
     மாயமோ - இது - ஞாயமோ - சந்
  திரன் இவன் முகமென்றாலும் - வரவர அதுக்குங்கலை
     தேயுமே-களங்கம்-தோயுமே

7. நவஞ்செய்த தாமரைப்பெண்ணும்-செபம் செய்கிறாள் இவன்மார்பில்
     நாடவோ - வந்து - கூடவோ - ஐயோ
  தவஞ்செய் வந்தானோ நான்முன்-தவம் செய்ததற்காகக் காட்சி
     தந்தானோ - தேடி - வந்தானோ

8. ஏலும்இவன் இலக்கணம்-எல்லாம் செய்த அயனே மோசம்
     இட்டானோ-மதி-கெட்டானோ-இவன்
  காலின் தூளுக் கொவ்வாஇந்திரன் மேலுலகை ஆள்வதென்ன
     கர்மமோ-இது-தர்மமோ

9. எடுத்திவன் சுந்தரத்துக்காம்-அடுக்கான பூஷணம் பூணா
     திருப்பான்என்-அரு-வருப்பான்என்-சும்மா 
 விடுத்தவன் அல்லவோ பொன்னின்-குடத்துக்குப் பொட்டிட்டுப்பார்க்க
     வேணுமோ அதிகம் - காணுமோ

10. தப்பிலா இவனைச் சேர - இப்படி பிரம்மா எனக்குத்
     தந்தானோ-இவனும்-வந்தானோ-ஓகோ
   எப்படி ஆனாலும் இவன் - பொற்புயம் தன்னைச் சேராமல்
     இருப்பேனோ - ஆவி - தரிப்பேனோ.

11. இந்தவிதம் எண்ணி மலர்ச்-செந்திருப்போல் மாயவேஷம்
     இட்டாளே-மானம்-விட்டாளே-நல்ல
  பைந் தொடியாய்ச் சூர்பநகை-வந்துராமச்சந்திரன் முன்னே
     படர்ந்தாளே-கிட்ட-நடந்தாளே