172 கருவிழி போலே காத்த ராவணனே-என்தன் கண்ராவி என்னசொல்வேன் ராவணனே 2. சிங்கம் இருக்கக்குட்டி வசமாமோ-உன்தன் செல்வத்தங்கை ஒருவர் தொடப்போமோ-என்னை அங்கப்பழுது மனிதன் செய்வானோ-செய்தும் அஞ்சா நெஞ்சு படைத்தும் உய்வானோ 3. ஊர்க்குருவி உயரப் பறந்தாலும்-அது உயர்ந்த கருடன் ஆமோ ஒருக்காலும்-இந்த பார்க்குள்ளே மனிதர் மிகுந்தாலும்-உன்தன் பாதத் தூளுக் கொப்பாரோ எக்காலும் 4. எட்டுத் திக்கும் உன்பேரைப் பழித்தானே-மனிதன் என்னையும் கொண்டையைப் பிடித் திழுத்தானே-அய்யோ கிட்டிச் செவியரிந்து முனைந்தானே-உன்னைக் கிள்ளுக் கீரையாகவே நினைந்தானே 5. துணைகும்ப கர்ணா இங்கே மேவாயோ-என்றும் தூக்கப் பேய்பிடித்த நீ ஆவாயோ-அடா பிணமே கரதூஷணா வாரீரோ-நான் பெண்பிறந்து பட்டதைநீர் பாரீரோ 6. அத்தைமரு மகன்என்ப திதுதானோ-பிரம்ம அஸ்திரம் விட்டால் மனிதன் அழியானோ-இந்திர சித்தே என்போல உன்தன் முனைபோச்சோ-தேவேந் திரனை செயித்த தெல்லாம் விழலாச்சே 7. குட்டி மனிதன் என்னை வதைத்தானே-என்தன் குலை கலங்கிடவே போட் டுதைத்தானே எட்டிப் பார்த்திவன் அண்ணன் பிரிந்தானே-இவனை ஏவிவிட்டறியான் போல் இருந்தானே 8. இந்திர சந்திரா தியர்கள் பணிகேட்க-உலகில் எந்தெந்த வீரர்களும் முடிதாழ்க்க-வந்து பந்தியிருக்கும் உங்கள் சபைநேரே-மூக்கும் பறிபோய் நான் வருவேனோ துரைமாரே |