173 சூர்ப்பநகை ஸ்ரீராமருக்கு மீளவும் இதவுரைத்தல் விருத்தம்-11 பேய்வடிவாம் அரக்கியிந்தப் படிஅழுதாள் ராமனிடம் பின்னும் வந்தாள் தேவநீ அறியாதே இளையவன் இப்படி செய்தான் செய்தால் என்ன கோவமுள்ள இடத்தில் அல்லோ சந்தோஷம் உண்டென்னைக் கூட்டிக் கொண்டால் ஆவதுமெத் தவும்உண்டு கேள் என்பாள் மருவிஎன்னை ஆள்என் பாளே தரு-5 மோகனராகம் அடதாள சாப்பு பல்லவி என்னுருவில் கொஞ்சம் கொய்தீர்-எனக் கென்ன தாழ்ச்சிநீர் செய்தீர் (என்) அநுபல்லவி அன்னியள் ஆகஎன்னைப் பிரிய விடாமல் என் அழகுகண் டொருவர்கண் ஏறுபடாமல் (என்) சரணங்கள் 1. நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் உம்மை நானே சுமந்து கொண் டெட்டவோ-ஆரும் திடுக்கிடவே உம்மை எதிர்த்தபேர் தலைகளைத் திருகி மலைமலையாக் கொட்டவோ-நல்ல குடித்தனத்துக்கிவள் ஆகும் ஆகாதென்று குறிப்பதின்னம் முட்ட முட்டவோ-கேட்டால் இடுப்பு சீதைக்குக் கொஞ்சம் மூக்கிவளுக்குக் கொஞ்சம் என்றெவர்க்கும் சரிக் கட்டவோ-எண்ணி(என்) 2. குற்றம் போலே செய்து குணம் செய்தீர் என்னைக்கொட்டிக் கொள்ளும் காமப் பேயைக் கொல்லவோ-நல்ல பத்தினியாகநின்றிராமல் காய்கனிகளைப் பறித்துக் கொண்டுவரச் சொல்லவோ-உமது |