178 வேல்ஒடிந்து கால்ஒடிந்து-கோல்ஒடிந் துதிரப்பெரு வெள்ளத்தில் மிதப்பாரும்-ஆனைவிழுந்த பள்ளத்தில் பதைப்பாரும்-கதிகலங்கி மெத்த உள்ளம் கெடநொந்து ரத்தவெள்ளந் தனில் வந்து விழுந்தார் அனேகம் அரக்கர்-ரத்தவெறியால் அழிந்தார் அனேகம் அரக்கர்-தூஷணன் கண்டு விளைத்தானே செருவில்லை வளைத்தானே கணைசெல்ல விடுத்தானே மழைபோலே-ராகவன் அதைத் தடுத்தானே கணையாலே-அதின்பிறகு விடுகணை பொடிபட ஒருகணை சடுதியில் மெய்தமுனையோடு தொட்டானே சாமிக்குநெற்றி மத்தியிலேபட விட்டானே-ரகுநாயகன் மீறிஅவன் ஏறிவரு தேரதிலே சாரதியை வெட்டினானே கணைஎய்து-குதிரைகளைக் கொட்டினானே தலைகள்கொய்து-கொய்ததல்லாமல் வில்லுந் துணிந்திட அவன் சொல்லும் துணிந்திடத் தேரை வேறுவேறு நொறுக்கினானே-அவன்கைகாலை கூறுகூறா நறுக்கினானே-நறுக்கினபின் மின்னும் அவன் எதிராகப் பின்னும் ஒருகணைபோக விரல் ஒத்துத் தொடுத்தானே தூஷணனும் சிரம் அற்றுப் படுத்தானே-அதனைக்கண்டு விண்ணுலகில் அனைவரும்-மண்ணுலகில் முனிவரும் வெருள் துன்பம் பிரிந்தாரே-வாழ்த்தொடு புஷ்ப வருஷங்கள் சொரிந்தாரே-அரக்கர்பட்ட வெற்றிநல் லோர்தொடுக்க ரத்தவெள்ளாறெடுக்க விசையமங் களம்பாடத் திசையெங்குங் கொண்டாட (அடி) 3. தத்திவரும் பரிகளும் சுற்றிவரும் கரிகளும் தாவிவரும் பெருந்தேரும் சேவகம் பேசியபேரும் தளகர்த்த வீரரும் வளம்மிக்க சூரரும் தண்டுடனே எதிர்வரும் மண்டியசேனாதிபரும் சாரிசாரி யாகவந்து போரிலே மிகமுனைந்து |