179 தம்பி தூஷணன் பட்ட புண்பாடது முட்ட தணல் போல நிவந்தானே-சாதிலிங்கம்போல் இணைக்கண்கள் செவந்தானே-செவந்தபின்பு தாக்கிய புலியை ஒத்து மூக்கிலே விரலைவைத்துத் தாழ்ச்சி இதுவென நொந்தானே-நொந்து பொல்லாத ராட்சத கரனும் வந்தானே-வந்து சுற்றிலும் சதுரங்கத் தளத்தோடே ரணரங்கம் அதைத்தேடி சாமிராகவனைக் கண்டான்-மனிதன்இவன் ஆமென மனதிற் கொண்டான்-சேனைகள்விட்ட சக்கரம் இருப்புலக்கை கப்பணம் முசுண்டி பண்டி சஸ்திரம்வே லாயுதங்கள்-குறித்துவிடும் அஸ்திரம்சூ லாயுதங்கள்-பொடிப்பொடியாத் தறிபட்டும் முறிபட்டும் விலகச்சிலை வளைத்துச் சாய்த்தானே சரதாரை-ரகுநாயகன் தேய்த்தானே வெகுபேரை-வரும் அரக்கர் தலையைச் சிலையை ரத்தின முடியைக் கொடியைவெட்டிச் சரித்தானே சிலகணையால்-அடிவயிற்றை எரித்தானே சிலகணையால்-இரைக்குவந்த சாகினியும் டாகினியும் காளிகளும் கூளிகளும் சதுர்கூடிப் பார்த்தாடுமே-கவந்தமதுக் கெதிராகக் கூத்தாடுமே-படைகளெல்லாம் சரியானது கண்டு கரனானவன் முண்டு சாகசங்கள் செய்தானே-ஒருநொடியில் ஆயிரம்அம் பெய்தானே-எய்ததுகண்டு சற்றுநேரத்தில் அய்யன் அத்தனைக் கத்தனைவிட்டு தவிடாக ஊதினானே-பின்னையும்சில அவன்மேலே மோதினானே-அரக்கன் அங்கே சாதித்த கணையாலே ஆதித்த குலநாதன் தனுவையும் ஒடித்தானே-தவமுனிவர் மனதையும் மடித்தானே-ராமனுக்குத் |