பக்கம் எண் :

181

  கோதண்டம் அரக்கர் சீவனைக்
     குடிக்கவேண்டுமென்று           சமைந்ததாம்

4. ராம லட்சுமணர் வடிவெலாம்என்
     னாலேசொல்லிமுடி              போகுமோ-அந்த
  காமராசன் வடிவும் அவர்
     காலின் தூளுக்கிணை            ஆகுமோ

5. கிட்டிப் போய் என்சுகக்
     கேளியிலே மையல்              கொண்டேனே-அங்கே
  திருஷ்டிப் பிரியமான பெண்கள்
     சிகாமணி ஒருத்தியைக்           கண்டேனே

6. சுந்தரமும் அவள் சிகப்பும்
     தொட்டுக் கொள்ளலாம்          அண்ணாவே-நான்
  இந்தவயதினிலே என்கண்ணால்
     எங்கும் கண்டதில்லை           அண்ணாவே

7. மன்னா உன்னால் நான் அவளை
     வாய்க்கடங்காப் பிடியாப்         பிடித்தேனே-ஒரு
  சின்னமனிதன் கையால் என்றன்
     செவியும் மூக்கும் போக்         கடித்தேனே

8. அந்தோ என்னாலே பதினால்
     ஆயிரம் தேர்க்காரரும்           மூண்டாரே-எதிர்
  வந்தார் கரன்முதலானோர் அந்த
     மனிதனால் கால்                மாண்டாரே

9. செப்புச் சிலையுமல்ல அந்தப்பெண்
     செம்பொற்சிலை வார்த்தாற் போல் இருக்குதே-நான்
  ஓப்பெங்கும் காணேன் அவளே
     உனக்காம் என்மனம்            உருக்குதே

10. தாவிப்பிடித் தேனே எனக்கு மெள்ளத்
     தப்பி விட்டாள் வந்             தெடுப்பாயே-அந்த
  தேவி இங்கே வந்தால் உன்னிட
     சீவனை யாகிலும்               கொடுப்பாயே