226 வெய்யவல் லரக்கர்வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த கைதம்மான எண்றண்ணல் காணுதி கடையின் என்றான் (மாரீசன் வதைப்படலம் 43, 48, 50, 51, 61) லட்சுமணர் சீதாதேவியைத் தேற்றல் விருத்தம்-18 - தரு-10 அக்கணத்தினில் ஐயனும் வெய்தன் சக்க ரத்தின் தகைவரி தாயதோர் செக்கர் மேனிப் பகழி செலுத்தினான் புக்க தேயம்புக்கு இன்னுயிர் போக்கெனா நெட்டிலைச்சரம் வஞ்சனை நெஞ்சுறப் பட்ட தப்பொழுதே பகு வாயினால் அட்டதிக்கினும் அப்புறமும் புக விட்ட ழைத்தொரு குன்றென வீழ்ந்தனன் (மாரீசன் வதைப்படலம் 75, 76) எயிறலைத்து முழைதிறந் தேங்கிய செயிர் தலைக்கொண்ட சொல்செவி சேர்தலும் குயில் தலத்திடை உற்றதோர் கொள்கை யாள் வயிறலைத்து விழுந்து மயங்கினாள் குற்றம் வீந்த குணத்தின் எங்கோமகன் மற்றவ் வாளரக்கன் புவி மாயையால் இற்று வீழ்ந்தனன் என்னவும் என்அயல் நிற்றியோ இளையோய் ஒருநீ என்றாள் எண்மையார் உலகினில் இராமற்கு ஏற்றம்ஓர் திண்மை யார்உளர்எனச் செப்பற் பாலதோ பெண்மையால் உரைசெயப் பெறுதிரால் உண்மையான் அனையவட்கு உணரக்கூறினான் பார்எனக் கனல்எனப் புனல்எனப் பவனவான் பேர்எனைத் தவை அவன் முனியின் பேருமால் கார்எனக் கரியஅக் கமலக் கண்ணனை ஆர்எனக் கருதிஇவ் இடரின் ஆழ்கின்றீர் |