229 மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்தம்மை மீனென மிளிரும் கண்ணாய் வேர்அறவெல்வர் என்னின் யானையின் இனத்தையெல்லாம் இளமுயல் கொல்லும் இன்னும் கூனுகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான்கொல்லும் என்றான் மின்திரண்டனைய பங்கி விராதனும் வெகுளிபொங்கக் கன்றியமனத்து வென்றிக்கரன் முதல்கணக் கிலோரும் பொன்றிய பூசல்ஒன்றும் கேட்டிலிர்போலும் என்றாள் அன்றவர்க் கடுத்ததுன்னி மழைக்கண்ணீர் ஆலிசோர்வாள் சீறினன் உரைசெய்வான் அச்சிறுவலிப் புல்லியோர் கட்கு ஈறுஒருமனிதன் செய்தான் என்றெடுத் தியம்பினாயேல் தேறுதி நாளையேஅவ் இருபது திண்தோள் வாடை வீறிய பொழுது பூளைவீஎன வீவன் அன்றே மேருவைப் பறிக்கவேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின் நீரினைக் கலக்கவேண்டின் நெருப்பினை அவிக்கவேண்டின் பாரினை எடுக்கவேண்டின் பால்நிகர் செஞ்சொல் ஏழாய் யார்எனக்கருதிச் சொன்னாய் இராவணற் கரிதென் என்றான் அரண்தரு திரள்தோள்சால உளஎனின் ஆற்றல் உண்டோ கரண்டநீர் இலங்கைவேந்ததைச் சிறைவைத்த கழற்கால்வீரன் திரண்டதோள் வனத்தை எல்லாம் சிறியதோர் பருவந்தன்னில் இரண்டுதோள் ஒருவனன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் என்றிவன் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் சென்றன திரள்தோள் வானம் திண்டினமகுடம் திண்கை ஒன்றோடுஒன்றடித்த மேகத்து உரும்என எயிறுதம்மில் மென்றனவெகுளி பொங்க விட்டது மாயவேடம் செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமம் செய்தாள் கவினும் வெம்சிலைக்கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கெரி புனிதர்ஈயும் அவியைநாய் வேட்டதெள்ள என்சொன்னாய் அரக்கஎன்னா புல்நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்துநின்ற என்உயிர்இழத்தல் அஞ்சிஇற்பிறப் பழிதல் உண்டோ |