23 அராஅணைத் துயில்துறந்த அயோத்திமேவிய இராகவன் மலரடி இறைஞ்சி ஏத்துவாம் காப்பு-மிகைப்பாடல் 1, 2, 5 அபசாரக்ஷமை விருத்தம்-3 தரு-3 முத்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக் கவிஞர் கட்கொன்று ணர்த்துவென் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவ ரானவர் தம்முளும் முந்திய நாவி னான்உரை யின்படி நான்தமிழ்ப் பாவி னாலிது உணர்த்திய பண்பரோ பாயிரம் 5, 10 நாராயணாய நமவென்னும் நன்னெஞ்சர் பாராளும் பாதம்பணிந்து ஏத்துமா றறியேன் காராரும் மேனி கருணாகரமூர்த்திக்கு ஆராதனைஎன் அறியாமை ஒன்றுமே மிகைப்பாடல்-7 நூற்பெருமை (&பயன்) விருத்தம்-4 தரு-4 இறுவ ரம்பில் இராமஎன் றோர்உம்பர் நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் மறுவில் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ அன்ன தானம் அகிலநல் தானங்கள் கன்னி தானம் கபிலையின் தானமே |