பக்கம் எண் :

231

பேதாய் பிழைசெய்தனை பேர்உலகின்
மாதா அனையாளை மனக்கொடுநீ
யாதாக நினைத்தனை எண்ணம் இலாய்
ஆதாரம் நினக்கினி யார்உளரோ

எல்லா உலகங்களும் இத்திரனும்
அல்லாதவர் மூவரும் அந்தகனும்
புல்வாய் புலிகண்டது போல்வரலால்
வில்லாளனை வெல்லும் மிடுக்குளரோ

இம்மைக் குறவோடும் இறந்தழியும்
வெம்மைத் தொழில் இங்கிதன் மேலிலையால்
அம்மைக்கு அருமாநரகம் தருமால்
எம்மைக்கு இதமாக எண்ணினைநீ

முத்தேவரின் மூல முதற்பொருளாம்
அத்தேவர்இம் மானிடர் ஆதலினால்
எத்தேவரோ டெண்ணுவது எண்ணம்இலாய்
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால்

புரம்பற்றிய போர்விடையான் அருளால்
வரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும்
உரம்பெற்றன ஆவன உண்மையினோன்
சரம்பற்றிய சாபம் விடுந்தனையே

வானாள் பவன்மைந்தன் வளைத்தவிலான்
தானேவரின் நின்று தடுப்பரிதால்
நானே அவண் உய்ப்பென் இந்நன்னுதலை
போநீ கடிதென்று புகன்றிடலும்
                               (சடாயு உயிர்நீத்தபடலம் 6-9, 12-16)

சடாயுவுக்கும் ராவணனுக்கும் உயுத்தம்

விருத்தம்-21 - தரு-12

கேட்டான் நிருதர்க்கிரை கேழ்கிளர்தன்
வாள்தாரை நெருப்புக வாய்மடியா
ஓட்டாய் இனிநீஉரை செய்குநரை
காட்டாய் கடிதென்று கனன்றுரையா