236 துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய தள்ளி ஓங்கிய அமலன் தன்தனி உயிர்த்தந்தை வள்ளியோன் திருமேனியில் தழல்நிற வண்ணன் வெள்ளி ஓங்கலில் அஞ்சனமலைஎன வீழ்ந்தான் தம்தாதையரைத் தனயர் கொலை நேர்ந்தார் முந்தாரே உள்ளார் முடிந்தானே முன்னொருவன் எந்தாயே எதற்காகநீயும் இறந்தனையால் அந்தோ வினையேன் அருங்கூற்றும் ஆனேனே பின்னுறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள் தன்னுறுவல் தீர்ப்பான் தனியுறுவது ஓராதே உன்னுறவு நீதீர்த்தாய் ஓர்உறவும் இல்லாதேன் என்னுறுவான் வேண்டி இடருறுவேன் எந்தாயே மாண்டேனேயன்றோ மறையோர் குறைமுடிப்பான் பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன் நீண்டேன் மரம்போல நின்றொழிந்த புன்தொழிலேன் வேண்டேன் இம்மாயப் புன்பிறவி வேண்டேனே என்தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீகிடந்தாய் வன்றாள் சிலையேந்தி வாளிக் கடல்சுமந்து நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல்நின்றேனே வடுக்கண்வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் எடுத்தனன் ஏகுவானை எதிர்த்தெனது ஆற்றல்கொண்டு தடுத்தனென் ஆவதெல்லாம் தவத்து அரன்தந்த வாளால் படுத்தனன் இங்குவீழ்ந்தேன் இதுஇன்று பட்டதென்றான் பெண்தனி ஒருத்திதன்னைப் பேதைவாளரக்கன் பற்றிக் கொண்டனன் ஏகநீயிக் கோளுறக் குலுங்கல் செல்லா எண்டிசை இறுதியான உலகங்கள் இவற்றைஇன்னே கண்ட வானவர்களோடும் களையுமாறின்று காண்டி (சடாயு உயிர்நீத்தபடலம் 82, 83, 85, 92, 93, 95-98, 113, 117) |