240 ஐந்தைந்தடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த வையந்திரிந்தார், கதிரவனும் வானின்நாப்பண் வந்துற்றான் எய்யும்சிலைக்கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எவ்வுயிரும் கையின்வளைத்து வயிற்றடக்கும் கவந்தன் வனத்தைக் கண்னுற்றார் நால்திசைப் பரவையும் இறுதி நாள்உறக் காற்றிசைத்து எழஎழுந்து உலகைக் கால்பரந்து ஏற்றிசைத்து உயர்த்துவந்து இடுங்கு கின்றன போல்திசை சுற்றிய கரத்தில் புக்குளார் முற்றிய உயிரெலாம் முருங்கவாரி தான் பற்றிய கரத்தினன் பணைத்த பண்ணையில் துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன் கொற்ற வாய்தல் செயல்குறித்த வாயினான் தணிக்கும் தன்மைத் தன்றெனின் இன்றித் தகைவாளால் கணிக்கும் தன்மைத் தன்று விடத்தின் கனல்பூதம் பினிக்கும் கையும் மெய்பில வாயும் பிழையாமல் துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் இனையர் ஆகிய இருவரும் முகத்திரு கண்போல் கனையும் வார்கழல் வீரர் சென்றணுகலும் கவந்தன் வினையின் எய்திய வீரர்நீர் யாவர்கொல் என்ன நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்றழன்றான் பொழிந்த கோபத்தன் பொறிக்கனல் விழிதொறும் பொடிப்ப விழுங்குவேன் எனவீங்கலும் விண்ணுறவீரர் எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் கைகள் அற்று வெங்குறுதியாறு ஒழுகிய கவந்தன் மெய்யின் பேற்கொடு கிழக்குறப் பெருநதி விரவும் சையமாநெடுந் தாழ்தடத் தனிவரை தன்னோடு ஐயம் நீங்கிய பேரெழில் உவமையன் ஆனான் ஆளும் நாயகன் அம்கையின் தீண்டிய அதனான் மூளும் சாபத்தின் முந்தியதீவினை முடித்தான் |