பக்கம் எண் :

242

நின்செய்கை கண்டுநினைந்தன வோநீள்மறைகள்
உன்செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ
என்செய்தேன் முன்னம் மறம்செய்கை எய்தினார்
பின்செல் வதில்லாப் பெருஞ்செல்வம் நீதந்தாய்

மாயப்பிறவி மயல்நீக்கி மாசிலாக்
காயத்தை நல்கிதுயரின் கரையேற்றி
பேயொத்த பேதை பிணக்கறுத்தஎம் பெருமான்
நாயொத்தேன் என்ன நலனிழைத்தேன் நானென்றான்

சந்தப்பூண் அலங்கல் வீரதனுவெனும் நாமத்தேன்ஓர்
கந்தர்ப்பன் சாபத்தால் இக்கடைப்படு பிறவி கண்டேன்
வந்துற்றீர் மலர்க்கை தீண்டமுன்னுடை வடிவம்பெற்றேன்
எந்தைக்கும் எந்தைநீர் யான்இசைப்பது கேண்மின்என்றான்

பழிப்பறு நிலைமை ஆண்மை பகர்வதென் பதுமபீடத்து
உழிப்பெருத் தகைமைசான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவனான அண்ணலும் அறிதிர் அன்றே
ஒழிப்பருந் திறல்பல்பூத கணத்தொடு உறையும் உண்மை

ஆயது செய்கைஎன்பது அறத்துறை நெறியின் எண்ணி
தீயவர்ச் சேர்கிலாது செவ்வியோர்ச் சேர்ந்து செய்தல்
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட் டன்னாள்
ஏயதோர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி

கதிரவன் சிறுவனான கனகவாள் நிறத்தினானை
எதிரெதிர் தழுவிநட்பின் இனிதமர்ந்து அவனின் ஈண்ட
வெதிர்பெருந் தோளினாளை நாடுதல் விழுமிதென்றான்
அதிர்கழல் வீரர்தாமும் அன்னதே அமைவதானார்
     (கவந்தன்வதைப்படலம் 1, 5, 17, 33, 35, 36, 40-48, 51, 53, 55)

ஸ்ரீராமர் சவரிக்கு முத்தியருளி அப்பால் ஏகல்

விருத்தம்-28

அன்னதாம் இருக்கைநண்ணி ஆண்டுநின்றளவில் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட் டன்னாட்கு
இன்னுரை யருளித் தீதின்றிருந்தனை போலும் என்றான்
முன்னிவற்கு இதுஎன்றெண்ணல் ஆவதோர் மூலம் இல்லான்