244 உ ஸ்ரீராமஜெயம் நான்காவது கிஷ்கிந்தாகாண்டம் அனுமார் மறைந்து நின்று யோசித்தல் விருத்தம் 1 சவரிசொன்ன வழிபிடித்து ராமனும் தம்பியும் நடக்கத் தான்கண் டேகிக் கவலைகொண்டு சுக்ரீவன் விடஅனுமான் மறைந்துநின்று கருதிப்பார்த்தான் தவவடிவர் வரிசிலையர் புரிசடையவர் இளங்குமரர் தருமசீலர் இவர்எவரோ என்றுசொல்லிக் கண்ணுவான் யோசனையால் எண்ணுவானே திபதை-1 சங்கராபரணராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. இன்னார் இனியார்என்று தெரியேனே-புண்ணியம் என்னசெய்தேன் இவர்கள் வரத்தானே 2. இங்கே என் கண்ணின் முன்னே உரித்தாரே-வந்து கங்கை உதித்தாற்போலே குதித்தாரே 3. காளைப் பருவத்திந்த காட்சிதந்தாரே-இவர் வேளைக்குத் தக்கவேஷம் கொண்டுவந்தாரே 4. தேவர்க்கும் தேவர்இவர் என்றுசொல்லவோ-அவர் மூவர் இவர்இரண்டு பேர்கள் அல்லவோ 5. அசங்காத பலர்உள்ள சிலாக்கிய வான்கள்-இவர் பசும்புல் தேயநடவா பாக்கியவமான்கள் |