245 6. எல்லா வல்லமையும் செய்யஉரியோர்-இவர் கல்லாக் கலைகளெல்லாம் கற்றபெரியோர் 7. பிராண சஞ்சீவிபோலே ஒன்றை விடுத்தார்-தங்கள் திராணியால் அதைத்தேடி இங்கே அடுத்தார் 8. அடைவான மூப்பிளமை பூணுகிறாரே-இவர் உடலும் நிழலும்போலக் காணுகிறாரே 9. வளைத்த வில்லும் அம்பும்கைக் கொண்டபடையோர்-இவர் இளைத்த பேர்களைக் கைதூக்கும் எண்ணம்உடையோர் 10. கல்லும் முள்ளும் மல்லிகை மலர்போலே-இவர் செல்லக் குளிருதையோ விழிமேலே 11. குவடும் காடும் செடிக ளும்புரியுதே-அய்யோ இவரைக் கண்டுபேயும் கண் ணீர்சொரியுதே 12. பறவைகளும் கரைந்து முகம் வாடுதே-இவர்க்கு சிறகை விரித்து மேலே பந்தல்போடுதே அனுமார் ஸ்ரீராமருக்கு வரலாறு கூறுதல் விருத்தம்-2 மாசகல இந்தவண்ணம் எண்ணிச்சின்ன வன்னிவடி வுடன்நின்றான் நீஆர்பிள்ளாய் பேசெனவே வாயுமகன் அனுமான் என்பேர் பெருமலையில் வாலியினால் சுக்கிரீவன் ஆசகல ஒளிந்திருப்பான் தேவரீரை அறிந்துவர என்னைவிட்டான் வந்தேன் என்னத் தாசரதி சுக்ரீவன் எங்கே என்று தான்சொல்ல வணங்கி அனுமான் சொல்வானே தரு-1 சுருட்டிராகம் ஆதிதாளம் பல்லவி சுக்ரீவன் பேர்நீ சொன்னபோதே-அவன் சகுர்தம் அல்லவோ சுகுர்தம் (சுக்) |