பக்கம் எண் :

250

    திண்ணன்எனும் தம்பியினால் கிளப்பி விட்டுத்
          தேரினிலே போம்சீதை முடிந்து போட்ட
    துண்ணெனும் ஆபரணங்கள் காட்டக்கண்டு
          துடிக்கின்றான் சாமிகுறை படிக்கின்றானே

திபதை-4

கண்டாராகம்                             அடதாளசாப்பு

கண்ணிகள்

1. நின்று தெரிந்து குலமடந்தையர்
     தக்களைக்           கொண்டீரோ-இல்லையோ
  கணவன் இருந்தும் உடைமை எறிந்த
     பெண்களைக்         கண்டீரோ

2. அரசிலே மணிமுடி சுமந்துஉல
     கங்கொள            நாடினேனே-ஐயையோ
  சிரசிலே முடிசுமந்தொரு
     பெண்பழி            சூடினேனே

3. தசரதன் தபசுகள் புரிந்துவ
     ரும்பாலன்           ஆனேனே-ஐயையோ
   மிசைபடும் சுவையுள கரும்பில்
     வெறும்பூ            ஆனேனே

4. வாரிதி தந்தவர் கங்கை அழைத்தவர்
     மரபில்              வந்தேனே-ஐயையோ
  பாரியை ஆனாலும் ரட்சணை செய்யப்
     படாமல்             மெலிந்தேனே

5. மங்கை எனைப் பார்க்க நான்முகச் சோடைக்கு
     மாற்றிட்டுத்          தீர்ப்பேனோ-ஐயையோ
  அங்கிங்கும் பார்த்தேன் வனம் பார்த்தேன் இனி
     ஆர்முகம்           பார்ப்பேனோ

6. வீண்பணிதி ஏதுக்கார் என்னைமீட்பவர்
     மேல்என்            றறிந்தாளோ-ஐயையோ
  ஆண்பிள்ளை அல்லநான் பெண்பிள்ளை என்றெண்ணி
     அணியை            எறிந்தாளோ