பக்கம் எண் :

251

7. அவளுக்குநானும் எனக்கவளும் பூட்டும்
     ஆரங்கள்           பூண்பேனோ-ஐயோஅவள்
  பவளக் கனிவாயும் முத்துநகையும் நான்
     பரிந்தென்று காண்பேனோ

8. பணிதி இங்கிது சனகிஅங்கம்நி
     றைந்திடச்       சேர்வேனோ-ஐயோஅவள்
  குணசௌந்தரிய மலர்முகங் கண்டு
     கண்களி        கூர்வேனோ

9. குலந்தரும் கொடியுடன் தவஞ்செய்து
     போந்தேன்      என்பேனோ
  இலங்கையில் விட்டு வெறுங்கையாய் வந்து
     சேர்ந்தேன்      என்பேனோ-ஐயையோ

10. இல்லாளை விட்டு வல்லாண்மைபேசி
     இன்னம்        இருந்தேனே-ஐயையோ
   புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற்
     போலே        இருந்தேனே

ஸ்ரீராமனுக்கு சுக்கிரீவன் துணிவு கூறல்

விருத்தம்-6

இந்தவித மாக ராமச்
     சந்திரன்மனம் நோகும் வேளை
     தொந்தம் உளசுக்கிரீவ
     னுந்துணிவு செப்பு வானே

தரு-2

நாட்டைக் குறிஞ்சிராகம்                    ஆதிதாளம்

பல்லவி

   ஏதுக்கு இந்தவி சாரம்
   ஏதுக்கித்தனை தூரம்                           (ஏதுக்)

அநுபல்லவி

போதும் பிரமாண்டம் அப்       புறம்போய் வருகிறேன்
சீதையைக் கொண்டுவந்து         செணத்தில் தருகிறேன் (ஏது)