பக்கம் எண் :

252

சரணங்கள்

1. தருமராமரம் எய்தாய் துந்துமிஎலும்பை
     தம்பியாலே          எறிந்தாய்-சாமி
  கருதினது தருவேன் என்பலன் உன்பலன்
     களும் நீயே          அறிந்தாய்-ராவணன்
  ஒருபது தலைகளும் உன்கணைபோலத்
  தருகிறேன் தருகிறேன் தேவியைக்கைமேலே (ஏது)

2. மின்பணி காட்டி உனக்குநான்இந்த
     வேதனை            காட்டினேன்-சாமி
  நின்பெருங் கவலையை நீக்க வேணும்சும்மா
     நேரம்பா            ராட்டினேன்-சாமி
  என்குறை முடிக்கிற தென்ன இதற்குமுன்னே
  உன்குறை முடிக்கிறேன் ஒருநிமிஷத்திற் சொன்னேன்  (ஏது)

3. சுத்தர் ஆகிய மூவர்க்கும் தேவர்க்கும்
     சூழுமோ படைக்      கூட்டம்-என்படை
  மெத்த உண்டுவரும் வெற்றியும் தரும்இனி
     மேலென்னமுக        வாட்டம்
  உற்றசீதையை உதவுகிறேன் இதுநிதானம்
  கற்றுக்கற்றுச் சொல்லிஎன் காரியமல்லவோ பிரதானம் (ஏது)

ஸ்ரீராமரை வாலி நிந்தித்தல்

விருத்தம்-7

    ராமனை இந்தப்படி சுக்கிரீவன் தேற்ற
          நல்லனுமான் வாலியைக் கொன்றிப்போதிந்தக்
    கோமகன் சுக்கிரீவன்முடி சூட்டிஎல்லாம்
          கூடும்என்றான் சுவாமியுமங் கிசைந்தான் அப்பால்
    பூமகன்வா லியும்தம்பி தானும் சண்டை
          போடயிலே அய்யன்அம்பு போடச்சாய்ந்து
    பேய்முகனாய் வாயில் வந்த தெல்லாம் வாலி
          பேசுவான் ராகவனை ஏசுவானே