பக்கம் எண் :

253

தரு-3

சாரங்காராகம்                            அடதாளசாப்பு

பல்லவி

     ஏனிந்த மதிகுறித்தாய்  மறைந்துவாளி
     எடுத்தென்மேல்       ஏன்தெறித்தாய்       (ஏனி)

அநுபல்லவி

     மானபூஷணனான     தசரதன் உன்னைப்பெற்று
     வரங்கள் தந்தது      நல்லாய்
     குரங் கைக்கொல்லவோ சொல்லாய்           (ஏனி)

சரணங்கள்

1. நரர்க்கும் வானவர்க்கும்             உண்டோதொந்தம்-முன்பின்
     ஞாதி வழக்குண்டோ சொல்அது   பந்தம்
  அரக்கன் அழிவுசெய்தால் பல        வந்தம்-ஆகி
     ஆயுதம் இல்லாரை அடிப்பதோஉன் சந்தம்
     அதுவுமல்லாமல் ஆண்மை       சொல்லாமல்
     எதிரில்நில்லாமல் என்னை        வெல்லாமல் (ஏனி)

2. வலிய மரங்கள் ஏழும்              தொளைத்தாயே-அந்த
     வலிமையிருந்தும் எனக்          கிளைத்தாயே
  கலிராசன் போல்வந்து              முளைத்தாயே
     காட்டில் மறைந்து வில்லைகாணாமல் வளைத்தாயே
     காரியம் இதுசுத்தக் கபடம்        உனைப்பெற்ற
     சூரியகுலம் மெத்தத்             துலங்கும்அடபித்த (ஏனி)

3. தன்மம் வளர்க்கவந்த               ரகுராமா-பரதன்
     தனக்கு மூத்தபிள்ளை            நீயாமா
  உன்மனது தான்என்ன               மிகநோமா-வாலி
     உயிரைக்கொண்டால் சீதை        ஒழிந்த துயரம்போமா
     உனக்கு ஞாயமோ               என்உபாயமோ
     எனக்கபாயமோ                 என்னமாயமோ   (ஏனி)

வாலி குற்றங்களை அவனுக்கு ஸ்ரீராமர் விரித்தல்

விருத்தம்-8

இன்னை வாலி சொல்ல இராகவன் அவனை நோக்கி
மின்னையும் கொண்டாய்தம்பி மேதினி தனையும் கொண்டாய்