259 தரு-7 சௌராஷ்டிரராகம் அடதாளசாப்பு பல்லவி அரசுசெய் வதென்ன-எறிந்துபோட்ட-தல்லடா சுக்ரீவா (அ) அநுபல்லவி நிருபன்என்றே போதே கெர்வம் மெத்தகாணும் நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் (அர) சரணங்கள் 1. கோல மன்னவருக்குச் சதுரங்கம்-செங் கோலைப் போலத்தருமோ உத்துங்கம் நாலு திசைக்குள்ள ஆதங்கம்-தீர்த்து நடத்துவல்லவன் அல்லோ துரைசிங்கம் ஆலகால துஷ்டர் உறவென்று துள்ளாதே அனுமானைப் போல்ஒத்த அமைச்சரை விள்ளாதே காலந்தெரிந்த பேரியோர்களைத் தள்ளாதே கால்போகா இடத்திலே தலையிட்டுக் கொள்ளாதே (அர) 2. மங்கையர் களுடனே சூட்சி-கொண்ட மன்னவர்க் கவமானம் காணி யாட்சி எங்கள் இடத்தில் அந்த அத்தாட்சி-போதும் இதைவிட இனிவே றேன்சாட்சி உங்கள் வாலியும் மங்கைய ரால்முனை சிந்த உருண்டானே அறிந்தாயே முந்த முந்த செங்கோல் கோணினால் எங்கும்கோணும் அந்த தேசத்து நன்மைதுன்மை ராசருக்கல்லோ இந்த (அர) 3. பண்ணிய தீமையி னால்ஒரு கூனி-என்னைப் பரதேசி ஆக்கினாளேஅவ தானி எண்ணி எளியவரை அது போல்நீ-சரியா எதிரிட்டுக் கொண்டால் அதுவே ஆனி உண்மையாக இன்னம் உறிதிசொல்வேன் இப்போது ஓருத்தர் செய்தஉதவியை மறக்கில்அதுவே தீது மண்ணில் இருந்து வழக்கோரம் சொல் லொண்ணாது மயிரைப் பிளந்து விவகாரங்களை ஓது (அர) |