266 விடவே போனதூதர்களில் வீரர்சேர அணிஅணியாக் கடல்போல் வந்து ராகவனைக் கண்டார் சேவை கொண்டாரே திபதை-7 மங்களகௌசிகைராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. சதவலி படைகள் ஒரு பத்துகோடி-சுசே ஷணன்படைகள் பத்துநூறா யிரங்கோடி பதுமமுகன் பதினால் நூறா யிரங்கோடி-தீர்க்க பரதன் இட பன்ஓரா யிரங்கோடி 2. பனசன் படைகள் பன்னீரா யிரங்கோடி-நீலன் படைகளும் பதினையா யிரங்கோடி அனுமன் இருப்பத்தையா யிரங்கோடி-நீலன் அட்சயன் படைமுப்பத்தையா யிரங் கோடி 3. தசமுகன் படைமுப்பதா யிரங்கோடி-நல்ல சாம்புவன் ஆயிரத்தறு நூறுகோடி மதிது மிந்தன் நூறுநூறா யிரங்கோடி-அந்த மயிந்தன் இருபதா யிரங்கோடி 4. கேசரிபடை ஐம்பதா யிரங்கோடி-மிக்க கெவையாட்சன் படைஆ யிரங்கோடி வீசுதுன் முகன் இருநூறா யிரங்கோடி-நளன் விருபாக்ஷன் ஒன்பதா யிரங்கோடி 5. குமுதன் படை நாற்பத்தெண்ணா யிரங்கோடி-நளன் கூட்டும் படைகள் நூறா யிரங்கோடி சமுகப்படை இந்தப்படி கூடிக்கூடி-வரச் சாமிகண்டு மகிழ்ந்தானே கொண்டாடி சாம்புவந்தன் அனுமாரைத் துதித்தல் விருத்தம்-18 மிக்கான கவிஏழு பத்து வெள்ளம் வீரரொடு சாமிகண்டான் சுக்ரீவன்தான் தெற்கான வழிசொல்ல ராமன் தானும் சீதைஉருச் சொல்லிதருமோ திரமும் பெற்றான் பிக்கான மலைகளும்நா டுகளும்தேடிப் பிலம்புகுந்து கடந்துசம்பா தியின்சொல்லாலே |