பக்கம் எண் :

266

விடவே போனதூதர்களில் வீரர்சேர அணிஅணியாக்
கடல்போல் வந்து ராகவனைக் கண்டார் சேவை கொண்டாரே

திபதை-7

மங்களகௌசிகைராகம்                          ஆதிதாளம்

கண்ணிகள்

1. சதவலி படைகள் ஒரு         பத்துகோடி-சுசே
     ஷணன்படைகள் பத்துநூறா  யிரங்கோடி
  பதுமமுகன் பதினால் நூறா     யிரங்கோடி-தீர்க்க
     பரதன் இட பன்ஓரா       யிரங்கோடி

2. பனசன் படைகள் பன்னீரா     யிரங்கோடி-நீலன்
     படைகளும் பதினையா      யிரங்கோடி
  அனுமன் இருப்பத்தையா       யிரங்கோடி-நீலன்
     அட்சயன் படைமுப்பத்தையா யிரங் கோடி

3. தசமுகன் படைமுப்பதா        யிரங்கோடி-நல்ல
     சாம்புவன் ஆயிரத்தறு      நூறுகோடி
  மதிது மிந்தன் நூறுநூறா       யிரங்கோடி-அந்த
     மயிந்தன் இருபதா         யிரங்கோடி

4. கேசரிபடை ஐம்பதா          யிரங்கோடி-மிக்க
     கெவையாட்சன் படைஆ    யிரங்கோடி
  வீசுதுன் முகன் இருநூறா       யிரங்கோடி-நளன்
     விருபாக்ஷன் ஒன்பதா       யிரங்கோடி

5. குமுதன் படை நாற்பத்தெண்ணா யிரங்கோடி-நளன்
     கூட்டும் படைகள் நூறா     யிரங்கோடி
  சமுகப்படை இந்தப்படி         கூடிக்கூடி-வரச்
     சாமிகண்டு மகிழ்ந்தானே    கொண்டாடி

சாம்புவந்தன் அனுமாரைத் துதித்தல்

விருத்தம்-18

    மிக்கான கவிஏழு பத்து வெள்ளம்
          வீரரொடு சாமிகண்டான் சுக்ரீவன்தான்
    தெற்கான வழிசொல்ல ராமன் தானும்
          சீதைஉருச் சொல்லிதருமோ திரமும் பெற்றான்
    பிக்கான மலைகளும்நா டுகளும்தேடிப்
          பிலம்புகுந்து கடந்துசம்பா தியின்சொல்லாலே