272 வேலிகல் சினவு தாடகை விளிந்துருள வில் கோலி அக்கொடுமையாள் புதல்வனைக் கொன்றுதன் காலியல் பொடியினால் நெடியகற்படி வமாம் ஆலிகைக் கரியபேர் உருவளித் தருளினான்      நல்லுறுப் பமையும் நம்பியரில் முன்னவன் நயந்து எல்லுறுப் பிரியபேர் எழுசுடர்க் கடவுள்தன் பல்லிறுத்தவன் வலிக்கு அமைதியம்பகம் எனும் வில்லிறுத் தருளினான் மிதிலைபுக் கனையநாள்      தெவ்விரா வகைநெடுஞ் சிகைவிரா மழுவினான் அவ்விரா மனையும் மாவலி தொலைத் தருளினான் இவ்விரா கவன்வெகுண்டு எழும்இரா அனையன்ஆம் அவ்விராதனை இராவகை துடைத்தருளினான்      ஆயமாநாகர் வாழ் ஆழியானே அலால் காயமான் ஆயினான் அவனோ காவலா நீயமான் நேர்தியால் நிருதமாரீசனாம் மாயமா னாயினான் மாயமானாயினான்      முனைவரும் பிறரும்மேல் முடிவரும் பகலெலாம் இனையர்வந் துறுவர்என்று இயல்தவம் புரிகுவார் வினையெனும் சிறைதுறந்து உயர்பதம் விரவினார் எனையர் என்றுரைசெய்கேன் இரவிதன் சிறுவனே      மாயையால் மதியிலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் நீஐயா தவமிழைத் துடைமையால் நெடுமனம் தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்                          (நட்புக்கோட்படலம் 2, 6, 7, 9, 11, 13, 14) ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ஆதரணை சொல்லல் விருத்தம்-4-திபதை-3 எனநினைந் தினைய என்ணி இவர்கின்ற காதல் ஓதக் கனைகடல் கரைநின்றேறாக் கண்ணினை களிப்பநோக்கி அனகனைக் குறுகினான் அவ்அண்ணலும் அருத்திகூரப் புனைமலர்த் தடக்கை நீட்டிப் போந்தினி திருத்திஎன்றான்    |