பக்கம் எண் :

274

முட்டி நின்றவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட அஞ்சி நெஞ்சுலைய ஓடினான்
வட்ட மண்டலத்து அரிதுவாழ் வெனாப்
எட்டரும் பெரும்பிலனும் எய்தினான்

எய்துகாலை அப்பிலனுள் எய்தி யான்
நொய்தின் அங்கவற் கொணர்வென், நோன்மையோய்
செய்தி காவல்நீ சிறிது போழ் தெனா
வெய்தின் எய்தினான் வெகுளி மேயினான்

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயினூடு எய்தும் என்னயாம்
பொன்னின் மால் வரைப் பொருப் பொழித்து வேறு
உன்னு குன்றமெலாம் அடுக்கினேம்

ஒளித்த வன்உயிர்க் கள்ளை உண்டுளம்
களித்த வாலியும் கடிதின் எய்தினான்
விளித்து நின்றுவே றுரைபென்றா இருந்து
அளித்த வாறுநன்று இளவலார் எனா

பற்றி அஞ்சலன் பழியின் வெஞ்சினம்
முற்றிநின்ற தன் முரண்வலிக் கையால்
எற்றுவான் எடுத்தெழுதலும் பிழைத்து
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன்

உருமை என்றிவற் குரியதாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் ஈங்கிது எம்கடவுள் என்றனன்

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்குதோள் தம்பிக்குத் தன் அரசுரிமைப்
பாரம் ஈந்தவன் பரிவிலன் ஒருவன்தன் இளையோன்
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமா றுளதோ

உலகம் ஏழினோடு ஏழும் வந்துஅவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டித்