பக்கம் எண் :

28

குடியில் ஆறிலொரு கடமை கொண்டுசெங்
     கோலின்முகம்                       சாயாமலே (ராசா)
மறுமங்கை யருக்கும் மறுமன்ன வருக்கும்
     மார்பும் முதுகும்                     கொடாமலே
வளரும் அண்ட லட்சுமியும்தன் அர
     மனையைவிட்டடி                    எடாமலே
அறுபதாயிரம் வருஷமும் ஏ
     காதிபத்தியம்                       விடாமலே
ஆரும் மனதில் விசாரத்தால் ஆ
     ராய்ச்சி மணியைத்                        தொடாமலே (ராசா)

-0-0-

சக்கிரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல்

விருத்தம்-3

இருந்ததசரத ராசன் நெடுநாளாய்ப் புவியாண்டோன்
          இடையே இந்தப்
பெரும்புவியை ஆள்வதற்கும் முத்தியிலே சேர்ப்பதற்கும்
         பிள்ளை காணேன்
அருந்தவனே குலகுருவே வதிஷ்டமுனி யேபிள்ளை
          அதைநான் காண
வருந்துவதில் லாவகையை மொழியென்றான் இதற்கென்ன
           வழியென் றானே.

தரு 2

துசாவந்தி ராகம்                               ஆதிதாளம்

பல்லவி 

     பிள்ளையில்லாத பாக்கியம் - நான்
     பெற்றிருந் தென்னசி லாக்கியம்                  (பிள்)

அநுபல்லவி

வள்ளலே சென்மமல்டன் என்          றொருகாலே
     வசைகொண்டேன் தசரதன்நான்    புவிமேலே
கள்ளியானது நெடுகவ                ளர்ந்ததாலே
     காய்உண்டோ கனிஉண்டோ      அதுபோலே          (பிள்)