29 சரணங்கள் மறுவில்லாது இந்தசூரிய வங்கிசம்இது வளரும் வாங்கிசம் ஆச்சே-இது மழைபேய்ந் தடிமறைந்தாற் போலஎன் மட்டிலே நின்று போச்சே அறுபதி னாயிரம் வருஷமும் அரசுதான் இனி ஆரைக்கொண்டு திருந்தும் குறைவில்லாத அந்த சஞ்சீவி மருந்தும் கொடுக்கும்தெய்வமும் நீதானே கிடைத் திருந்தும் (பிள்) பெருக்கக் காண்பதே காண்பதல்லால் பெறுவதொன்றும் காணேன்-மிகு பிச்சர்போல நெடுநாளும் உண்டஉண்ட எச்சிலை உண்ணல் ஆனேன் விருத்தன் நான்இனித்தவ சில்லே வேணும் அல்லாமல் புவிஆள்வதும் சிறப் பல்ல இருத்தும் வாழையடி வாழையாய்ப் புல்ல இவன்மகன் இவன்ஆம் என்று சொல்ல (பிள்) மோந்தால் முத்தியும் வரும் பரத்திலே முத்தியும்கூட வருமே-மேலே காய்ந்தால் உடம்பெங்கும் குளிருமே தழுவஇன்பம் தருமே வாய்ந்த பொன்னுலகளவும் போய்ச்சனி மண்டலமும் திருத்திக் கொண்டேன் புவிதனி ஏந்தினேன் இல்லையே ஒருபிள் ளைக்கனி என்னவீ டென்ன வாசல் எனக்கினி(பிள்) ----- பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு விருத்தம்-4 மன்னவனாம் தசரதபூ பதியிவ் வாறு மக்களில்லாத் துன்பத்தை வதிஷ்ட னோடே சொன்னவுடன் அந்தமுனி வனும்தியானித்தான் சுரர்முதலா னவர்கள்மக மேருமேலே சின்னஅரக் கரைநடுங்கி வாழ்த்தும் போது |