பக்கம் எண் :

30

சிறைக்கருடன் மீதினில்அச் சுதனும் வந்தான்
பொன்னின்மலர் அவன்பதத்தில் இறைத்தே கண்ணீர்
     பொழிகின்றார் அரக்கர்துன்பம் மொழிகின் றாரே

தரு-3

அசாவேரி ராகம்                              ஆதிதாளம்

பல்லவி

கடைக்கண்ணால் இரங்கிப்             பார்அய்யா-பார்த்துக்
     காவாவிட்டால் இனிமேல்         ஆர்அய்யா     (கடை)

அநுபல்லவி

அடைக்கலம் எனஓடி                 வந்தோமே-நாங்கள்
   ஆலைக் கரும்புபோல           நைந்தோமே         (கடை)

சரணங்கள்

1.    சொர்க்காதி புவனமெல்லாம்           தாவிக்-கொண்டு
          துரத்தக் கும்பகர்ணன்தனை       ஏவி-மற்ற
     பக்கம் இந்திர சித்தென்னும் பெருங்          கோவி-ஆளப்
          பண்ணிவைத்தானே ராவணன்          பாவி

     செக்குள்ளே அகப்பட்ட எள்ளுப்       போலே-அரக்கர்
     கைக்குள்ளே அகப்பட்ட எங்கள்       மேலே-உனது (கடை)

2.    அளகேசன் புஷ்பகம்            தனைவிட்டான்-இலங்
          கையிலே சூரியன்தேரும்         வரவொட்டான்-மெத்தத்
     தளர இந்திரனைக்கூடச்          சிறையிட்டான்-அரக்கன்
          சருவகொள்ளை யடிக்கத்    தலைப்பட்டான்

     எளியோர்களை இப்படிஈனர்      ஒடுக்கல் ஆமோ
     கிளியை வளர்த்துப் பூனைகிட்டக்  கொடுக்கல்ஆமோ (கடை)

3.   பாவிஅரக்கன் பேச்சே           மேலாச்சு-நாங்கள்
          படைத்த பலங்கள்எல்லாம்   மேல்பூச்சு-நல்ல
     பூவைவண்ணா அரக்கன்              கைவீச்சு-வெள்ளிப்
          பொருப்பே அறியும்இனி         ஏன் பேச்சு

  ராவணன் வதைக்கின் றான்எங்கள்மேல்  என்னகண்டோ
  தேவநீ கேளாவிட்டால் திக்குத்திசை     இன்னமுண்டோ  (கடை)