பக்கம் எண் :

280

பற்றி ஆன்ற படைத்தலை வீரரும்
முற்றுணர்ந்த முதியரும் முன்பரும்
எற்றும் நும்மரசு எய்துவையாம் எனக்
கொற்ற நன்முடி கொண்டதிக் கோதிலான்

கொல்ல லுற்றனை உம்பியைக் கோதவற்கு
இல்லை என்பதுணர்ந்தும் இரங்கலை
அல்லல் செய்யல் உனக்கபயம் பிழை
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய்

அன்னதன்மை அறிந்தும் அருளலை
பின்னவன் இவன் என்பதும் பேணலை
வன்னிதான் இடும் சாப வரம்புடைப்
பொன்மலைக்கவன் நண்ணினான் போகலை

ஈரம் ஆவதும் இற்பிறப் பாவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றொருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கதோ

தருமம் அன்றிது எனும் தகைத்தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியை
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

தக்க இன்னதகாதன இன்னவென்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே

முன்புநின் தம்பிவந்து சரண்புக முறையிலோயைத்
தென்புலத் துய்ப்பென் என்றுசெப்பி னன்செருவில் நீயும்
அன்பினை உயிருக்காகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்றெய்த தென்றான்
   (வாலி வதைப்படலம் 98, 100, 102, 104, 105, 107, 118, 123)