282 ஒன்றுனக் குரைப்ப துண்டால உறுதியஃதுணர்ந்து கோடி குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்றுகூறும் நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற பொருள்க ளெல்லாம் கற்கின்ற இவன்தன் நாமம் கருதுவ இவனைக் கண்டாய் பொற்குன்ற மனைய தோளாய் பொதுநின்ற தலைமை நோக்கின் ஏற்கொன்ற வலியே சாலும் இதற்கொன்றும் ஏது வேண்டா மதவியல் குருங்குச்செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் உதவியை உன்னிஆவி உற்றிடத் துதவு கிற்றி பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் சிதைவில் செய்து நொய்தின் தீவரும் பிறவி தீர்தி அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன் மரைமலர்ப் பாதம்நீங்கா வாழுதி மன்னர்என்பார் எரிஎரனற் குரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் புரிதி சிற்றடிமைக்குற்றம் பொறுப்பர் என்றெண்ண வேண்டா பாலமை தவிர்நீ என்சொல் பற்றுதி யாயின் தன்னின் மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக் கால்தரை தேயநின்று கட்புலக் குற்றதம்மா மால்தரும் பிறவி நோய்க்கு மருந்துஎன வணங்கு மைந்த என்னுயிர்க் குறுதிசெய்தான் என்பதைஇறையும் எண்ணாது உன்னுயிர்க் கிறுதி செய்தி இவற்கமர் உற்ற துண்டேல் பொன்னுயிர்த் தொளிரும் பூணாய் போதுதி நிலைமை நோக்கி மன்னுயிர்க் குறுதி செய்வான் மலாடி சுமந்து வாழ்தி (வாலிவதைப்படலம் 136, 138, 141, 142, 153, 154) வாலி இறந்தபின் தாரை புலம்பல் விருத்தம்-11-திபதை-5 வாலியும் ஏக யார்க்கும் வரபிலா உலகில் இன்பம் பாலியா முன்னர் நின்று பருதிசெய் செங்கை பற்றி ஆவிலைப் பள்ளி யானும் அங்கத னோடும் போனான் வேல்விழி தாரை கேட்டு வந்தவன் மெய்யில் வீழ்ந்தாள் வரைசேர் தோளிடை நாளும் வைகுவேன் கரைசோர் இடர்வேலை கண்டிலேன் |