பக்கம் எண் :

283

உரைசேர் ஆருயிரே என்உள்ளமே
அரைசே யானிது காண அஞ்சினேன்

நறிதம் நல்லமிழ் துண்ண நல்கலின்
பிறியா இன்னுயிர்பெற்ற பெற்றிநாம்
அறியாரோ நமனார்அது அன்றெனின்
சிறியாரோ உபகாரம் சிந்தியார்

அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று
உணங்காநாள் மலர்தூய் உள்ளன்பினால்
இணங்காக் காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது இத்துணை வைகவல்லையோ

நையா நின்றெனன் யானிருந்து இங்ஙன்
மெய்வா னோர்திரு நாடுமேவினாய்
ஐயா நீஎனது ஆவி என்பதும்
பொய்யோ பொய் உரையாத புண்ணியா

எந்தாய்நீ அமிழ்தீய யாமெலாம்
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார்
நந்தா நாள்மலர்சிந்தி நண்பொடு
வந்தாரோ எதிர் வானுளோர் எலாம்

சொற்றேன் முந்துற அன்ன சொல்கொளாய்
அற்றான் அன்னது செய்கலான் எனா
உற்றாய் உம்பியை ஊழி காணும்நீ
இற்றாய் யானுனை என்று காண்கெனோ

நீரும் மேருவும் நீ நெருங்கினால்
மாறோர் வாளியுன் மார்பை ஈர்வதோ
தேறேன் யானிது தேவர் மாயமோ
வேறோர் வாலி கொலாம் விளிந்துளான்

அருமைந் தற்றம் அகற்றும் வில்லியார்
ஒருமைந் தற்கும் அடாதது உன்னினார்
தருமம் பற்றிய தக்கவர்க் கெலாம்
கருமம் கட்டளை என்றல் கட்டதோ.
                (தாரை புலம்புறு படலம் 1, 4, 6, 7, 9, 11, 13, 14, 16)