292 ஆகரத்தினும் பெரியன ஆறைந்து கோடி சாகரத் தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான் இளைத்து வேறொரு மாநிலம் வேண்டுமென்றி ரங்க முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும் விளைத்த வெஞ்சினத்து அரியினம் வெருவுற விரிந்த அளக்க ரோடும் அக்கவலன் என்பவனும் வந்தடைந்தான் ஆயிரத் தறுநூறு கோடியின் கடை அமைந்த பாயிரப் பெரும்படை கொண்டு பாவையின் திரையின் தாயுருத் துடனே வரத் தடநெடு வரையை ஏற் உருப்புயச் சாம்பன் என்பனும் வந்திறுத்தான் வகுத்த தாமரை மலரயன் நிசிசரர் வாழ்நாள் உருத்த தீவினை பொருவதோர் பெருவலியுடையான் பருத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி தொகுத்த கோடி வெம்படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான் இயைந்த பத்து நூறாயிரப் பத்தெனும் கோடி உயர்ந்த வெஞ்சின வானரப் படையொடும் ஒருங்கே சயந்தனக் கொரு வடிவெனத் திறல் கொடுதழைத்த மயிந்தன் மல்கசகோ முகன் தன்னொடும் வந்தான் கோடிகோடி நூறாயிரம் எண்எனக் குவிந்த நீடுவெஞ்சினத் தரியினம் இருபுடை நெருங்க மூடும் உம்பரும் இம்பரும் பூமியில் மூழ்கத் தோடலர்ந்த தார்க்கிரிபுரை துமிந்தனும் தொடர்ந்தான் கறங்குபோல் வனகாற்றினும் கூற்றினும் கடிய பிறங்கு தெண்டிரைக்கடல் புடை பெயர்ந்தெனப் பெயர்வ மறங்கொள் வானம் ஒன்பது கோடி எண்வகுத்த திறங்கொள் வெஞ்சினப் படைகொடு குமுதனும் சேர்ந்தான் ஏழினின் ஏழுநூறாயிர கோடி என்றிசைந்த பாழி நன்னெடுந் தோள்கிளர் படைகொண்டு பரவை ஊழி பேரினும் உலைவில உலகினில் உயர்ந்த பூழி விண்புகப் பதுமுகன் என்பவன் புகுந்தான் ஏழும் ஏழும் என்னுரைக்கின்ற உலகங்கள் எவையும் தாழும் காலத்தும் தாழ்விலாத் தடவரைக் குலங்கள் |