பக்கம் எண் :

293

சூழும் தோற்றத்த வலிகொள் தொள்ளாயிர கோடிப்
பாழி வெம்புயந்து அரியொடும் இடபனும் படர்ந்தான்

தீர்க்கபரதனும் வினதனும் சரபனும் திரைக்கும்
மால்கருங்கடற்கு உயர்ந்துள மைம்முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ணருங்கோடி கொண்டண்டமும் புறமும்
போர்க்கும் பூமியில் மறைதர முறையினின் புகுந்தார்

கையஞ்சாயுதம் உடையஅக் கடவுளைக்கண்டு
மெய்யஞ் சாதவன் மாதிரம் சிறிதென விரிந்த
வையம் சாய்தரத் திரிதரும் வானரச்சேனை
ஐயஞ்சாயிர கோடிகொண்டு அனுமன்வந் தடைந்தான்

நொய்தின் கூடியசேனை நூறாயிரகோடி
எய்ததேவரும் என்கொலோ முடிவுஎன்பது எண்ண
மையல் சிந்தையால் அந்தகன்மறுக்குற்று மயங்க
தெய்தச்சன் மெய்த்திருநெடுங் காதலன் சேர்ந்தான்

கும்பனும்குலச் சங்கனும் முதலினர் குரங்கின்
தம்பெரும்படைத் தலைவர்கள் தரவந்ததானை
இம்பர்நிறைவர்க் கெண்ணரிது இராகவன் ஆவத்து
அம்பெனும் துணைக்குரிய மாறுரைப்பு அரிதுஅறவே

இன்னசேனையை முடிவுற இருந்திவன் நோக்கிப்
பின்னை காரியம் புரிதுமேல் நாள்பல பெயரும்
உன்னி செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி
என்ன, வீரனைக்கை தொழுது இளையவன் செப்பும்

யாவது எவ்வுலகத்தினின் இங்கிவர்க் கியற்றல்
ஆவது ஆகுவது அரியதொன்றுள தெனல்ஆமே?
தேவ, தேவியைத் தேடுவது என்பதுசிறிதால்
பாவம் தோற்றது தருமமேவென்றது இப்படையால்
                           (தானைகான்படலம் 2, 22, 37, 38)