பக்கம் எண் :

300

    தூதன்அனு மான்மாட கூடம் சோலை
          சூளிகைமா ளிகையெல்லாம் சுற்றிச் சுற்றி
    நாதன்உளம் மகிழ்ந்தருளும் சீதைதன்னை
          நாடினான் இலங்கைஎங்கும் தேடினானே.

தரு-3

தோடிராகம்                          அடதாளசாப்பு

பல்லவி

தேடித் திரிந்தானே - சீதாதேவி
    தன்னை யனுமானே

அநுபல்லவி

ஆடிப் பறக்கின்ற          காற்றும் நுழையாத
அலங்கக் கொத்தளம் தங்கும் இலங்கைப் பட்டணமெங்கும்

சரணங்கள்

1. வாரணச்சோலை மந்திரச்சாலையும்
     மலர்ச்சோலையும் சா                 வடிகளும்
  தோரண மேடையும் பூமலர் ஓடையும்
     துலைகளும் தலை வாசற்              படிகளும்
  தேரடி களும்சொர்ணப் போரடிகளும் செந்நெற்
     சேர்அடிகளும் மதில்                 அடிகளும்
  கீரைவிரை புகுதா வளைகளும்தொ ளைகளும்
     கொடிகளும் செடிகளும்               கொடிகளும்
     காரியர் காவல் இருக்கும்              சிறைகளும்
          நாடகசாலையும் நவரத்ன         அறைகளும்
ஏராளமாக கோம் எழுதிய                  தகைளும்
     ஏகாந்தஸ்தலமும் தண்ணீர்ப்படித்       துறைகளும்
இடுக்குகளும் இருட்        டொடுக்குகளும் இருட்டுறி
அடுக்குகளும் மூலை        முடுக்குகளும் பாய்ந்து  (தேடி)

2. மலைநிகராகிய உப்பரீகைகளும்
     மாடமும் கூடமும்               திரைகளும்
  பலபல புரவியின் வெள்ளமும் பள்ளமும்
     பாதாளம் செல்லும்              புரைகளும்