பக்கம் எண் :

302

    மலர்விழியில் அறைந்துகா தினிலே கையை
          வைத்துடனே அரிகரீ என்று சொல்லிப்
    பலபலயோ சனையனுமான் எண்ணி எண்ணிப்
          பாவிப்பான் ராவணன்மேல் கோவிப்பானே

தரு-4

அடாணா ராகம்                               ஆதிதாளம்

பல்லவி

இந்த ராவணனைக் கண்டு சும்மா போனால்
என்ன அனுமான் நானே                        (இந்த)

அநுபல்லவி

அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ
ஆத்திநார் கிழித்தாற்போல் கிழிக்க நான் அறியேனோ

சரணங்கள்

1. புவியடங்கலும்           கிட்டவே-மண்டோதரி
     புலம்பும் ஓசை        முட்டவே-கண்டவர்கள்
  எவரும் கெக்கலி         கொட்டவே-வாலினாலே
     இழுத்துப் பிடித்துப்    பொட்டவே-கட்டி
இறுக்கிறேன் தோள்ஒடிய முறுக்கிறேன் தலைபத்தும்
அறுக்கிறேன் தேங்காய்போல நொறுக்கிறேன் அல்லாமல் (இந்த)

2. பன்னக சாலை          விட்டுத்-திருட்டுவேஷம்
     பண்ணி இலங்கை     மட்டும்-கொண்டு வந்தான்
  அன்னையைச் சிறையில்   இட்டு-வைத்த பாவி
     அரக்கன்என் எதிர்ப்   பட்டும்-கன்னத்தில்
அடிக்காமலும் கைகளை ஒடிக் காமலும் நெஞ்சிலே
இடிக்காமலும் என்கோபம் முடிக்காமலும் போவேனோ (இந்த)

3. காலனுக்குப             காரம்-ஆகுமேதேவர்
     களுக்கும் உண்டதி    காரம்-விறுதாவாய்
  மேலினிஏன் வி          சாரம்-சாமி சொந்த
     வேலைக் கிதுவே      நேரம்-இப்போது