311 சீதாதேவி இராவணனை இடித்தல் விருத்தம்-9 மிண்டாளன் அரக்க னிந்த வீண்வார்த்தை சொல்லச் சொல்ல கண்டாளன் சனகியுமென்றன் காகுத்தன் சரத்தினாலே உண்டான தெல்லாம் தோற்க ஊழிவந் தடுத்ததையோ சண்டாளன் எனக் கோபித்துத் தள்ளுவான் விள்ளுவாளே. தரு-7 மோகனராகம் ஆதிதாளம் பல்லவி ராட்சதப் பதரே துன்மார்க வார்த்தைகள் ஏற்குமோ போடா - ராட்சதப்பதரே (ராட்) அநுபல்லவி காட்சியா என்னைப் பார்க்காதே-இந்த தாழ்ச்சி ஆம்பழி ஏற்காதே-உன் வாழ்ச்சி வீணிலே போக்காதே-அர சாட்சி ஆனதைத் தோற்காதே (ராட்) சரணங்கள் 1. கிளைக்கும் மூன்று லோகமும் செலுத்தும் உன்கோலும் உன்தன் கீர்த்தியும் ஏன் தொலைக்கிறாய்-கெருவத்தாலே வெளிக்கப கீர்த்தியாகப் பாவபுண்ணியமும் பாராமல் விருதாவிலே ஏன் குலைக்கிறாய்-ஆகாசமட்டும் அளக்கும் இருப்புத் தூணைச் செல்லரிக்குமோ இத்தை அறியாமல் ஏன் மலைக்கிறாய்-அக்கினிதன்னில் குளித்துத் தவங்கள்செய்து பெற்றவரத்தை யெல்லாம் கொஞ்சத்தில் ஏன் கவலைக்கிறாய்-அடசண்டாளா வளர்த்திய வார்த்தைகள் படியாதே-தணல் ஒளிக்கமுன் தானையில் முடியாதே-என்னை இளக்கார மாக்கிடத் துணியாதே-எரி விளக்கினில் பூச்சிபோல் மடியாதே-அட (ராட்) |