பக்கம் எண் :

312

2. காயத்துடன் பிறந்த தங்கை மூக்கும் முலையும்
     காதும் அறுக்க        விடுத்தாய் வெளி நில்லாதென்
  நாயகற் கஞ்சியந்த மாயமான் பின்னெதிரிட்டு
     நாய்போற் பதுங்கி     அடுத்தாய்-நமன்போலும் உன்
  தீயரூபத்தைக் கண்டு மூர்ச்சையாய்ப் போனஎன்னை
  தீண்டாமல் மண்ணோ     டெடுத்தாய் கொல்வேன் என்றுமேல்
பாயும் சடாயுவாலே பூனைவாய் எலிபோல்உன்
     பவிஷெல்லாம் பறி    கொடுத்தாய்-அடசண்டாளா

     தாயிவள் எனமனம்    அறியாதோ-போடா
     யேயே இம்மாத்திரம்   தெரியாதோ-என்னைத்
     தீயுரை சொன்னநாக்   கெரியாதோ-பத்து
     வாயிலும் புழுவரச்     சொரியாதோ-அட (ராட்)

3. குதிக்கிறாய் சும்மாப் போமோ இப்பாவம் பின்னுக்கொன்று
     கோடியாய் வந்து வாய்க்குமே-உன் செல்வமெல்லாம்
  செதுக்கிற அரம்போல்என் பொறுமை ஆகிறதர்ம
     தேவதை தானே      தேய்க்குமே-உன்குலந்தன்னை
  மதிக்கா எட்டியைக் கூடி இலவுந்தீபட்டாற் போலென்
     வயிற்றெரிச்சலே      தீய்க்குமே என்பிராணநாதர்
  விதிக்கும் பாணம் என்தன் தலையைப் பனங்குலைபோல்

     வெட்டி வெளியிற்     சாய்க்குமே-அடசண்டாளா
     அதற்குள்ளே துள்ளிச் சாகாதே-இந்த
     பதைப்பினால் ஒன்றும் ஆகாதே-வாய்
     மதத்தினால் கெட்டுப்  போகாதே-நாளைக்
     கொதிக்கும் நரகத்தில்  மூழ்காதே-அட   (ராட்)

-----

சீதாதேவி தனியே புலம்பல்

விருத்தம் 10

    சானகிஇப் படிவைய அரக்கன் சீறித்
          தான்நடந்தான் அரக்கியரைக் கலைக்கச் சொன்னான்
   ஆனதுகண் டனுமானும் இவனை இங்கே
         அடிப்பெனென்று கையொடுகை பிசைந்தான் அப்பால்