பக்கம் எண் :

324

அநுபல்லவி

அடித்தானே அருங்காய் கனிகளை
ஒடித்தானே அரை நொடிக்குள் விசுவரூபம்
பிடித்தானே அந்த ராவணன் கீர்த்தியை
குடித்தானே கைகையக் கொட்டி தொடைதட்டிக் கொண்டு (அடி)

சரணங்கள்

1. ஆடச்சேயும் அசையச்சேயும்
     அறுந்தன                     சிலமரங்கள்-கைகளை
  மூடச்சேயும் முறுக்கச்சேயும்
     முறிந்தன                      சிலமரங்கள்-வேர்பிடுங்கிச்
  சாடச்சேயும் தாவச்சேயும்
     தறிந்தன                      சிலமரங்கள்-கொண்டாட்டம்
  பாடச்சேயும் பாயச்சேயும்
    பறிந்தன                      சிலமரங்கள்-வெகுவெகு

  கோடானு கோடிகளாக் கொம்பும்     கொடியுமாகக்
     குறைந்தான்                   சிலமரத்தை-பெருகிய
  நீடாழி முகட்டிலே அணைபோலே    கிடக்க
     நிறைத்தான்                   சிலமரத்தை-தேவர்கள்
  வாடாமல் ராட்சதர்கள் பாராமல்      வெளியெங்கும்
     மறைத்தான்                    சிலமரத்தை-வாரிவாரி
  ஏடாகூட மாலங்கைத் தெருக்கள்      தெருக்கள் எல்லாம்
     இறைத்தான்                   சிலமரத்தை-இப்படி

மேடென்றும் காடென்றும் தெரியாமல் முடிய
     விசைகொண் டெறிந்தமரம் திசைதிசை-போய்ப்படிய
மாடங்களும் அரக்கர் கூடங்களும் இடிய
     மதிகள் இலங்கை வீடெல்லாம் சிதறிப் பொடி - பொடிய (அடி)

2. அடிக்கடிமரம் ஒடிக்கும் ஓசையில்
     அண்டமும்               வயிறுளைக்க-அதுகண்டு
  எடுத்தராட்சதப் பெரும்படைக்கடல்
     எங்கெங்கும்               ஓடிவளைக்க-சினமுடன்
  கடுத்தரதகச துரகபதாதிகளை
     காலனும்                 கண்டுகளைக்கத்-திசைதிசை