பக்கம் எண் :

325

திடுக்கெனக் கருந்தூளி செந்தூளியாக
     சேடனும்            முடியிளைக்க-வந்தளவில்

  தடுக்காமல் மரத்தின்மேல் மரங்களா விட்டெறிந்து
     சதைத்தான்     சிலபடையை-மரம்பிடுங்கிப்
  பொடுக்கெனப் பள்ளத்திலே பிணம்பிணமா அடித்துப்

     புதைத்தான்           சிலபடையைத்-தேர்களை
  ஒடுக்கி மளமளென நொறுக்கி நொறுக்கிவிழ
     உதைத்தான்          சிலபடையை-மீன்குலம்
  வெடுக்கெனவே பிடுங்கி நடுக்கடலிலே தூற்றி
     விதைத்தான்          சிலபடையைக்-கையினாலே

  அடுத்தவர் ஆயுதத்தைப் பறித்துப்         பற்றி பற்றி
     அழுகல் வெற்றிலைபோலே குழைய     எற்றி எற்றி
  வடுப்பட வாலாலே சுருக்கிச்              சுற்றி சுற்றி
     வயிற்றுக் கடல்களெல்லாம் வாயில் வரக் குத்தி குத்தி     (அடி)

3. அதுசமயத்துக்கு மரங்கள் வாய்த்ததே
     அய்யனுக்குக் கொண்டாட்டம்-என்சொல்லப்
  பதியில் புகுந்ததே பருந்து காசும்முதல்
     பறவைகள்      ஆட்டம்பாட்டம்-மண்டைகளைச்
  சிதறுத் தேங்காய்போலே உடைத்தும் சாமிக் குண்டோ
     சிறிதாகிலும்     வாட்டம்-ராவணன்
  ததியில் அனுமானுக்கு உதவியா வளர்த்தானே
     தன்னுடைய பெருந் தோட்டம்-அங்கங்கே

  குதிரைமேல் ஆனைவிழத் தேர்மலைபோல் விழக்
     குழிந்ததே பெரும் பள்ளம்-பள்ளத்திலே
  எதிரிடும் ஆறுபோலே பெருகிக் கரைபுரள
     எடுத்ததே ரத்த  வெள்ளம்-பசிபோகக்
  கதியில்லா நரிகளும் நாயும் பேயும் உண்டு
     களித்ததே தங்கள் உள்ளம்-குரங்கென்று
  விதிமோசம் ஆகவந்தோம் நமக்கிவன் எமன்என்ன
     விட்ட தரக்கர்   கள்ளம்-கிடைக்காத

  புதுவிருந் திதுவென்று மெத்த மெத்த வேதாள
     பூதங்கள் நடமிடப் பிணநாற்றமும் மீள